திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியுள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு

5 நாள் விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியுள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு
Updated on
2 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் தனி நீதிபதி அதி​கார வரம்பை மீறி​யுள்​ளார் என்று நீதி​மன்​றத்​தில் அரசுத் தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்​டது.

திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்​தர​வுக்கு எதி​ராக தாக்​கல் செய்த 26 மேல்​முறை​யீட்டு மனுக்​கள் மீதான விசா​ரணை உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று நடை​பெற்​றது.

அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வாதிடும்​போது கூறிய​தாவது: தெளி​வான, உறு​தி​யான ஆவணங்​கள், ஆதா​ரங்​கள் இல்​லாமல் தாக்​கல் செய்த மனு​வின் அடிப்​படை​யில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்​கி​யுள்​ளார். கோயி​லில் பல ஆண்​டு​களாகக் கடைப்​பிடித்து வரும் வழக்​கத்தை மாற்ற தனி நீதிபதி உத்​தர​விட்​டது சட்​டப்​படி செல்​லுமா என்​பதே வழக்​கின் மையக் கேள்​வி​யாக உள்​ளது.

கலாச்​சா​ரம், ஆகம விதி​கள், பூஜை விதி​கள், அர்ச்​சனை முறை​கள், வழி​பாட்டு உரிமை சட்​டம் ஆகிய அனைத்​தும் முறை​யாக​வும் சட்​டப்​பூர்​வ​மாக​வும் இருக்​கும் நிலை​யில், அதை மாற்​றும் வகை​யில் தனி நீதிபதி உத்​தர​விட்​டது சரியல்ல. ஒரு தனி நபர் புதி​தாகக் கூறும் கலாச்​சா​ரத்தை ஏற்​கு​மாறு கோயில் நிர்​வாகத்​துக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது.

திருப்​பரங்​குன்​றத்​தில் கோயில், அறநிலை​யத் துறை, தேவஸ்​தானம் மற்​றும் அறங்​காவலர் குழு ஆகியோரின் ஒரு​மித்த முடி​வின்​படி, உச்​சிப்​பிள்​ளை​யார் மண்​டபத்​திலேயே கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது. இதை மாற்​றக் கோரும் மனுவை தள்​ளு​படி செய்​திருக்க வேண்​டும்.

மலை உச்​சி​யில் இருப்​பது தீபத்​தூண் என்​ப​தற்​கான எந்த ஆவணங்​களும், வரலாற்று ஆதா​ரங்​களும் இல்​லை. 1920-ல் மாவட்ட நீதிபதி முழு மலை​யை​யும் ஆய்வு செய்​த​போது, மலை உச்​சி​யில் தர்கா மட்​டுமே உள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளார். தூண் இருந்​தது தொடர்​பாக எந்​தக் குறிப்​பும் இல்​லை. தீபம் ஏற்​று​வது போன்ற கோயில் நடை​முறை​கள், உரிமை​யியல் தன்மை கொண்​ட​வை.

இது​போன்ற வழக்​கு​கள் உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில்​தான் விசா​ரிக்​கப்பட வேண்​டும். உயர் நீதி​மன்ற தனி நீதிபதி நேரடி​யாகத் தலை​யிட முடி​யாது. மதுரை பாண்டி கோயில் தொடர்​பான வழக்​கிலும், அர்ச்​சகர் பூஜை செய்​யும் உரிமை குறித்து உரிமை​யியல் நீதி​மன்​றத்தை அணுகவே தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. எங்கு தீபம் ஏற்ற வேண்​டும் என்​பதை தீர்​மானிக்​கும் இறுதி அதி​காரம் அறநிலை​யத் துறைக்கே உள்​ளது. ஒரு கோயி​லில் பல ஆண்​டு​களாகக் கடைப்​பிடித்து வரும் பழக்க வழக்​கங்​களை திடீர் உத்​தர​வால் மாற்ற முடி​யாது. தனி நீதிபதி தனது அதி​கார எல்​லையை மீறி, அவசர​மாக உத்​தரவு பிறப்​பித்​துள்ளார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பின்​னர் நீதிப​தி​கள், “திருப்​பரங்​குன்​றம் வழக்​கில் உரிமை​யியல் நீதி​மன்ற உத்​தர​வு​கள் என்ன? உயர் நீதி​மன்ற தனி நீதிபதி இது​போன்ற விவ​காரங்​களில் தலை​யிட முடி​யுமா என்​ப​தற்​கான சட்ட ஆதா​ரங்​கள் மற்​றும் அறநிலை​யத் துறை விதி​கள் தொடர்​பான ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டும்” என்று அரசுத் தரப்​புக்கு உத்​தர​விட்​டனர்.

மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் தரப்​பில், “தனி நீதிபதி முன்​னிலை​யில் தாக்​கல் செய்த மனுவிசா​ரணைக்கு உகந்​தது இல்லை என்று கூற முடி​யாது. பூஜை, அர்ச்​சனை, தரிசனம் ஆகியவை ஆகம விதி​களுக்கு உட்​பட்​ட​வை. கார்த்​திகை தீபம் ஏற்​று​வ​தில் எங்​கும் ஆகம விதி​கள் நடை​முறைப்​படுத்​த​வில்லை. மதச்​சார்​பற்ற அரசு, ஒரு சார்​புடன் நடந்து கொள்​ளக் கூடாது. பக்​தர்​களின் உணர்​வு​களுக்கு மதிப்​பளிக்க வேண்​டும்” என்று கூறப்​பட்​டது. மற்​றொரு மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர், தர்கா தரப்​பு, மலைஉச்​சி​யில் உள்ள கோயில் தல விருட்​சத்தை ஆக்​கிரமித்து வரு​வ​தாகக் கூறி, அது தொடர்​பான புகைப்​படங்​களைத் தாக்​கல் செய்​தார்.

அப்​போது தர்கா தரப்​பில் “மனு​தா​ரர் தரப்பு வாதங்​களை ஏற்​கக் கூடாது. இது உரிமை​யியல் சார்ந்த மனு” என்று கூறப்​பட்​டது.பின்​னர் மேல்​முறை​யீட்டு மனுக்​கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் நீதிப​தி​கள் தள்​ளி​வைத்​தனர். நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ரான மேல்​முறை​யீட்டு மனுக்​கள் மீதான விசா​ரணை ஜன. 7-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in