“ராஜினாமா செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல” - அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து திருமாவளவன் கருத்து

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on
1 min read

திருச்சி: அ​தி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​வது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல என்​றும், எந்​தத் தொகுதி இடைத்​தேர்​தலிலும் தான் போட்​டி​யிடப் போவ​தில்லை எனவும் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: அதி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​வது தமிழக அரசி​யலுக்கு ஆரோக்​கிய​மானது அல்ல. எந்​தப் பின்​னணி​யில் இதை அவர்​கள் செய்​கிறார்​கள் எனத் தெரி​யாது. அதி​முக​வின் உள்​கட்சி விவ​கார​மாக​வும் இதை கடந்து செல்ல முடிய​வில்​லை. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​கள் திடீர் திடீரென பதவி வில​கு​வது ஜனநாயகத்​துக்கு உகந்​தது அல்ல.

கூட்​டணிக் கட்​சிகள் மீது நம்​பிக்கை இல்​லாமல் தவெக​வினர் அதி​முக எம்​எல்​ஏக்​களை ராஜி​னாமா செய்ய வைக்​கிறார்​களா என்ற யூகத்​துக்கு பதில் சொல்ல முடி​யாது. இந்த ஆட்சி 5 ஆண்​டு​கள் தொடர வேண்​டும் என்​ப​தில் தெளி​வாக இருக்​கிறோம்.

அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜூனா ஆகியோர் என்னை சந்தித்து ஜூலை 1-ம் தேதி நடைபெறும் தேனீர் விருந்து போன்ற கூட்​டத்​துக்கு அழைப்பு விடுத்​தனர். இதுதவெக கூட்​ட​ணிக்கு முழு​மை​யான வடிவம் கொடுக்​கும் கூட்​ட​மாக இருக்​கலாம். கரூர் துயரச் சம்​பவத்​துக்கு பிறகு முதல்​வர் என்ற அடிப்​படை​யில் விஜய் அங்கு சென்று பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு ஆறு​தல் சொல்ல வேண்​டும் என்ற எதிர்​பார்ப்பு எல்​லோருக்​கும் உள்​ளது. அவர் அங்கே செல்​வது அவசி​ய​மானது. எந்த தொகுதி இடைத்​தேர்தலிலும் நான் போட்​டி​யிடப்​போவ​தில்லை.

இடைத்​தேர்​தலில் போட்​டி​யிட வேண்​டும் என்​றோ, அமைச்​சர​வை​யில் இலாகா கேட்டோ அழுத்​த​மும் தரவில்​லை. அமைச்​சர் சரத்​கு​மார் போதைப் பொருள் பயன்​படுத்​தி​யது உண்​மை​யாக இருந்​தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு கூறி​னார்.

<div class="paragraphs"><p>திருமாவளவன்</p></div>
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in