தவெக கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்

தவெக கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்
Updated on
1 min read

கரூர்: கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசா​ரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் வரும் 29-ம் தேதி ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லாளர் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா மற்​றும் கரூர் எஸ்.பி. உட்பட 8 பேருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்​றக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​டோருக்கு சிபிஐ அதி​காரி​கள் சம்​மன் அனுப்​பி​யும், போனில் அழைத்​தும் வரவழைத்​து, அவர்​களிடம் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தவெக பொதுச் செய​லா​ளர் என்​. ஆனந்த், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, இணைப் பொதுச் செய​லா​ளர் சி.டி.நிர்​மல்​ கு​மார், கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன் ஆகியோ​ரும், காவல் துறை தரப்​பில் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஜோஷ்தங்​கை​யா, ஏடிஎஸ்பி பிரேம்​ஆனந்​தன், டிஎஸ்பி செல்​வ​ராஜ், ஆய்​வாளர் ஜி.மணிவண்​ணன் ஆகியோ​ரும் டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் வரும் 29-ம் தேதி ஆஜராகு​மாறு சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது.

மேலும், சிபிஐ விசா​ரணைக்​காக டெல்​லி​யில் உள்ள சிபிஐ அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு தவெக தலை​வர் விஜய்க்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக​வும், ஜனவரி முதல் வாரத்​தில் அவர் டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் ஆஜரா​வார் என்​றும் தகவல்​கள் வெளி​யாகியுள்​ளன.

தவெக கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்கு தடை கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in