முதல்வர் ஸ்டாலின் பிப். 24-ம் தேதி கன்னியாகுமரி வருகை

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

Updated on
1 min read

நாகர்கோவில்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வரும் 24-ம் தேதி மாலை நாகர்​கோ​வில் வரு​கிறார். அன்று கன்​னி​யாகுமரி திரு​வள்​ளுவர் சிலைக்​கான வெள்​ளி​விழா அலங்​கார வளைவை முதல்​வர் திறந்​து​வைக்​கிறார்.

தொடர்ந்​து, புத்​தளம் கல்​லடி​விளை​யில் மு.க.ஸ்​டா​லின் படைப்​பகம், கருணாநிதி சிலை ஆகிய​வற்றை திறந்​து​வைக்​கிறார். பின்​னர், நாகர்​கோ​விலில் வேப்​பமூடு பூங்​கா​வில் ரூ.50 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பொன்​னப்ப நாடார் வெண்கல சிலை​யை​யும் முதல்​வர் திறந்​து​வைக்​கிறார்.

அன்று இரவு நாகர்​கோ​வில் அரசு விருந்​தினர் மாளி​கை​யில் தங்​கும் முதல்​வர், அடுத்த நாள் (பிப். 25) காலை கன்​கார்​டியா பள்ளி மைதானத்​தில் நடை​பெறும் அரசு விழா​வில், புதிய திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி, முடிவுற்ற பணி​களை தொடங்கி வைத்​து, நலத்​திட்ட உதவி​கள் வழங்​குகிறார்.

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலின்  </p></div>
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in