‘ஒரு வாக்கைக் கூட தவறவிடக் கூடாது!’ - திமுக சட்டத் துறையினருக்கு ஸ்டாலின் கண்டிப்பு

‘ஒரு வாக்கைக் கூட தவறவிடக் கூடாது!’ - திமுக சட்டத் துறையினருக்கு ஸ்டாலின் கண்டிப்பு
Updated on
1 min read

எஸ்​ஐஆர் மூலம் தமி​ழ​கத்​தில் ஒரு வாக்கு கூட தவறி​வி​டாத வகை​யில் கண்​காணித்து செய​லாற்ற வேண்​டும் என திமுக வழக்​கறிஞர் அணிக்கு முதல்​வர் ஸ்டா​லின் கண்​டிப்​பான உத்​தரவை பிறப்​பித்​துள்​ளார்.

தமி​ழ​கத்​தில் எஸ்​ஐஆருக்கு திமுக-​வும் அதன் கூட்​டணி கட்​சிகளும் ஆரம்​பத்​தில் இருந்தே எதிர்ப்​புத் தெரி​வித்து வரு​கின்​றன. ஆனாலும் எஸ்​ஐஆர் பணி​யில் திமுக-​வினர் தீவிர கவனம் செலுத்தி வரு​கின்​ற​னர். இதற்​காக பாகம் வாரி​யாக திமுக-வைச் சேர்ந்த பிஎல்​ஏ-க்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை விநி​யோகித்​து, அதனை மீண்​டும் பெற்று பிஎல்ஓ- வசம் ஒப்​படைக்​கும் பணி​யில் தீவிரம் காட்​டினர்.

தற்​போது, தமி​ழ​கத்​தில் 99.27 சதவீதம் எஸ்​ஐஆர் படிவங்​கள் பெறப்​பட்டு இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்டு விட்​ட​தாக இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், திமுக தலை​வர் ஸ்டா​லின், மாநிலம் முழு​வதும் வாக்​காளர்​களால் படிவங்​கள் பெறப்​ப​டாத மற்​றும் பிஎல்​ஓ-​விடம் திரும்ப ஒப்​படைக்​காத படிவங்​களை கண்​காணித்​து, ஒரு ஓட்டு கூட தவற​வி​டா​மல் 100 சதவீதம் இணை​யத்​தில் பதிவேற்ற தேவை​யான முன்​னெடுப்​பு​களை மேற்​கொள்ள வேண்​டும் என திமுக வழக்​கறிஞர் அணிக்கு உத்​தர​விட்​டிருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது தொடர்​பாக அண்​மை​யில், திமுக சட்​டத்​துறை செய​லா​ள​ரும் எம்​பி-​யு​மான என்​.ஆர்​.இளங்கோ அறி​வால​யத்​தில் திமுக வழக்​கறிஞர் அணி கூட்​டத்தை கூட்​டி, எஸ்​ஐஆர் பணியை 100 சதவீதம் பூர்த்தி செய்​திட தேவை​யான ஆலோ​சனை​களை வழங்​கி​யுள்​ளார்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக வழக்​கறிஞர் அணி நிர்​வாகி​கள் சிலர், “பாஜக அரசு, எஸ்​ஐஆர் மூலம் தமி​ழ​கத்​தில் லட்​சக் கணக்​கில் ஓட்​டு​களை நீக்​கி, திரா​விடக் கட்​சிகள் கள்ள ஓட்டு மூலமே வெற்​றி​பெற்று வரு​வது போன்ற ஒரு தோற்​றத்தை ஏற்​படுத்த நினைக்​கிறது.

இதை முறியடிக்​கும் வித​மாக திமுக வழக்​கறிஞர் அணி மாவட்ட அமைப்​பாளர்​கள், தொகுதி பொறுப்​பாளர்​கள் சென்​னைக்கு வரவழைக்​கப்​பட்​டு, சட்​டத்​துறை செய​லா​ளர் என்​.ஆர்​.இளங்கோ தலை​மை​யில் நடத்​தப்​பட்ட கூட்​டத்​தில், எஸ்​ஐஆர் பணி​களை செம்​மை​யாக முடிப்​பது குறித்து விரி​வான ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​டது.

எஸ்​ஐஆர் பணி​கள் முடிவுற்​றாலும் வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யானதும் புதி​தாக வாக்​காளர்​கள் சேர்க்கை பணி நடக்​கும். அப்​போது, விடு​பட்​ட​வர்​களை கண்​டறிந்து அவர்​களை சந்​தித்​து, தொகுதி மாறி​யிருந்​தால் அவர்​கள் வசிக்​கும் பகு​தி​யிலேயே அவர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்​கும் படி வழக்​கறிஞர் அணி நிர்​வாகி​களுக்கு ஆலோ​சனை வழங்​கப் பட்​டுள்​ளது.

ஆக, எக்​காரணம் கொண்​டும் ஒரு வாக்​கைக் கூட தவற​விடக் கூடாது என்​பதே தலை​வர் ஸ்டா​லினின் கண்​டிப்​பான உத்​தர​வு. இந்​தப் பணி​களை தொகுதி பொறுப்​பாளர்​களின் கீழ் வழக்​கறிஞர் அணியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு செம்​மை​யாக செய்து முடிக்​கும் வகை​யில் அறி​வுரைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன” என்​றனர்​.

‘ஒரு வாக்கைக் கூட தவறவிடக் கூடாது!’ - திமுக சட்டத் துறையினருக்கு ஸ்டாலின் கண்டிப்பு
ஓபிஎஸ் புதுக் கட்சி - முடிவுக்கு வரும் சஸ்பென்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in