‘நீ நதி போல ஓடிக் கொண்டிரு...’ - இலங்கை நாடாளுமன்றத்தில் விஜய்க்கு வாழ்த்து

இலங்கை நாடாளுமன்றத்தில் ‘அழகிய தமிழ் மகன்’ படப் பாடலை பாடி விஜய்யை வாழ்த்திய  நிஹாம் காரியப்பர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் ‘அழகிய தமிழ் மகன்’ படப் பாடலை பாடி விஜய்யை வாழ்த்திய நிஹாம் காரியப்பர்.

Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக வெற்றி பெற்​றுள்​ளதற்கு இலங்கை நாடாளு​மன்​றத்​தில் விஜய் பட பாடலைப் பாடி வாழ்த்து தெரி​வித்​தனர்.

இலங்கை நாடாளு​மன்​றக் கூட்​டத்​தில் இலங்கை தமிழரசு கட்​சி​யின் எம்​.பி. சாணக்​கியன் ராச​மாணிக்​கம் பேசி​ய​தாவது: விஜய்க்கு வாழ்த்​துகள். தமிழ்​நாடு மக்​களோடும், தமிழ்​நாட்டு அரசோடும் ஈழத் தமிழர்​களு​டைய பிரச்​சினை​களுக்காக பணிசெய்​ய காத்​துக் கொண்​டிருக்​கிறோம்” என்று கூறி​னார்.

தொடர்ந்து பேசிய இலங்கை முஸ்​லிம் காங்​கிரஸ் பொதுச் செய​லா​ள​ரும், எம்​.பி.​யு​மான நிஸாம் காரியப்​பர் கூறுகை​யில், “எல்லா புகழும் இறைவன் ஒரு​வனுக்​கே, நீ நதி போல ஓடிக் கொண்​டிரு...” என்ற விஜய் நடித்த அழகிய தமிழ்​மகன் திரைப்​படத்​தில் வரும் பாடலை பாடி, வாழ்த்தினார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுச் செய​லா​ளர் ம.ஆ.சுமந்​திரன் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில் இலங்​கைத் தமிழ் மக்​களுக்​கு, தமிழ்​நாட்டு மக்​கள், அரசின் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்​டும் என்றார்.

தமிழ் தேசி​யப் பேர​வைத் தலைவரும், எம்​.பி.​யு​மான கஜேந்​திரகு​மார் பொன்​னம்​பலம் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில் இலங்​கைத் தீவில் ஈழத் தமிழர்​கள் நீண்​ட​கால​மாக தங்​களது தமிழ்த்​தேச அங்​கீ​காரத்​துக்​காக போராடி வரு​கின்​றனர்.

தமிழ்​நாட்​டில் ஏற்​பட்​டுள்ள இந்த அரசி​யல் மாற்​றம், எமது உரிமைப் போராட்​டத்​துக்கு வலுவைத் தரும் என எதிர்​பார்​க்​கிறோம் என தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>இலங்கை நாடாளுமன்றத்தில் ‘அழகிய தமிழ் மகன்’ படப் பாடலை பாடி விஜய்யை வாழ்த்திய  நிஹாம் காரியப்பர்.</p></div>
திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in