குறுவை சாகுபடி பாதிப்பை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

பி.ஆர்.பாண்டியன் | கோப்புப்படம்
பி.ஆர்.பாண்டியன் | கோப்புப்படம்
Updated on
1 min read

திருச்சி: குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்​மட்டக் குழுவை அமைக்க வேண்​டும் என தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: மேகே​தாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக மாநிலங்​களவை​யில் திமுக எம்​.பி. திருச்சி சிவாவும் மக்​களவை​யில் திமுக எம்​.பி. டி.ஆர்​.​பாலுவும் கோரி​யுள்ள ஒத்​திவைப்பு தீர்​மானத்தை வரவேற்​கிறோம்.

அதேவேளை​யில், மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் மீண்​டும் நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு எழு​திய கடிதத்​தை​யும், மேகே​தாட்டு அணை கட்​டக்கூடாது என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசு கொண்டு வந்த தீர்​மானத்​தில், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், மீண்​டும் நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​யதை​யும் அதை சட்​டப்​பேரவை ஏற்​றுக் கொண்​டதை​யும் நாங்கள் நிராகரிப்பு செய்கிறோம்.

டெல்டா மாவட்​டங்​களில் வழக்​க​மாக 5.14 லட்​சம் ஏக்​கர் குறுவை சாகுபடி நடை​பெறும் நிலை​யில், நிகழாண்டு மேட்​டூர் அணை​யில் போதிய நீர் இல்​லாத​தால் 4.50 லட்​சம் ஏக்​கரில் குறுவை சாகுபடி நடை​பெற​வில்​லை. மோட்டார் பயன்​படுத்தி மிகக் குறைந்த அளவே குறுவை சாகுபடி மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்​மட்டக் குழுவை அமைக்க வேண்​டும். குறுவை சாகுபடி செய்ய முடி​யாமல் பாதிக்​கப்​பட்​டுள்ள விவ​சா​யிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்​டும். மேலும், நிகழாண்டு சம்பா நெல் பயிர் சாகுபடியை விவ​சா​யிகள் மேற்​கொள்​வ​தா, வேண்​டா​மா என அரசு வழி​காட்​டு​தல் வழங்க வேண்​டும்.

தமிழகத்​துக்கு தர வேண்​டிய நீரை கர்​நாடகத்​திடம் கேட்​டுப் பெற வேண்​டும். கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு நீர் தர மறுத்​தால், இடைக்​கால இழப்​பீட்​டுத் தொகையை கர்​நாடக அரசிட​மிருந்து பெற்​றுத் தரு​மாறு மத்​திய அரசுக்கு அழுத்​தம் கொடுக்க வேண்​டும்.

ஜூலை 22-ல் நடை​பெறும் காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 53-வது கூட்​டத்​தில் எடுக்​கும் முடி​வின் அடிப்​படை​யிலும், பற்​றாக்​குறை காலத்​தில் கர்​நாடகம்- தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்​டிய கணக்​கீட்டு அடிப்​படை​யிலும் உரிய நீரை,கர்​நாடகத்​திடம் இருந்து தமிழகத்​துக்கு மேலாண்மை ஆணை​யம் பெற்​றுத் தர வேண்​டும்.இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பி.ஆர்.பாண்டியன் | கோப்புப்படம்
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in