சிவகாசி அருகே பட்டாசு உற்பத்தியின்போது நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள். (உள்படங்கள்) உயிரிழந்த பாண்டித்துரை, ராமச்சந்திரன், அய்யப்பராஜ்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள். (உள்படங்கள்) உயிரிழந்த பாண்டித்துரை, ராமச்சந்திரன், அய்யப்பராஜ்.

Updated on
1 min read

சிவகாசி / விருதுநகர்: சிவ​காசி அருகே செங்​கமலப்​பட்​டி​யில் தகர ஷெட்​டில் சட்​ட​விரோத​மாக பட்​டாசு உற்​பத்தி செய்​த​போது ஏற்​பட்ட வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 5 ஆக உயர்ந்​தது.

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி அருகே செங்​கமலப்​பட்​டியைச் சேர்ந்த ரவீந்​திரனின் மகன்​கள் ராமச்​சந்​திரன் (40), ராம்​பிர​காஷ் (32). இவ்​விரு​வரும் தங்​களுக்​குச் சொந்​த​மான நிலத்​தில் தகர ஷெட் அமைத்து சட்​ட​விரோத​மாக பட்​டாசு தயாரித்து வந்​தனர்.

நேற்று முன்​தினம் காலை பட்​டாசு உற்​பத்​தி​யில் ஈடு​பட்​ட​போது திடீரென வெடி விபத்து ஏற்​பட்​டது. இதில், அங்கு பணிபுரிந்த ராம்​பிர​காஷ், மீனம்​பட்​டியைச் சேர்ந்த இன்​னாசி​முத்து ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். ராமச்​சந்​திரன் படு​கா​யங்​களு​டன் விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இதில் இன்​னாசி​முத்​து​வின் சகோ​தரர் அய்​யப்​ப​ராஜும், அதே கிராமத்​தைச் சேர்ந்த பாண்டித்துரை என்​பவரும் மாயமானதாக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர். உயி​ரிழந்​தோரின் உடல் பாகங்கள் போலீஸா​ரால்சேகரிக்கப்​பட்டு பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்பட்​டன.

இந்​நிலை​யில், விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த ராமச்​சந்​திரன் நேற்று உயி​ரிழந்​தார். மாய​மான​தாகக் கருதப்​பட்ட அய்​யப்​ப​ராஜ், பாண்​டித்​துரை ஆகியோ​ரும் இந்த வெடி விபத்​தில் உயி​ரிழந்​த​தாக போலீ​ஸார் நேற்று உறுதி செய்​தனர்.

இதையடுத்து வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 5 ஆக உயர்ந்​தது. நேற்று பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலை​யில், ராமச்​சந்​திரன், ராம்​பிர​காஷ், பாண்​டித்​துரை ஆகியோரது உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இன்​னாசி​முத்​து, அய்​யப்​ப​ராஜ் ஆகியோரது உடல்​களை வாங்க மறுத்து அவர்​களது உறவினர்​கள் விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை வளாகத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, உயி​ரிழந்​தோர் குடும்​பத்​துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் மற்​றும் வரு​வாய்த் துறை​யினர் பேச்​சு​வார்த்தை நடத்தி சமா​தானம் செய்து அனுப்பி வைத்​தனர்.

<div class="paragraphs"><p>விருதுநகர் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள். (உள்படங்கள்) உயிரிழந்த பாண்டித்துரை, ராமச்சந்திரன், அய்யப்பராஜ்.</p></div>
“பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் கடும் தாக்குதல்” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in