எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அனைத்து கோரிக்​கைகளை​யும் ஏற்​ப​தாக அரசு உறுதி அளித்திருப்​ப​தால் எஸ்​ஐஆர் பணி புறக் கணிப்பு போராட்​டத்தை தற்​காலிக​மாக தள்​ளிவைப்​ப​தாக வரு​வாய்த் துறை சங்​கங்​களின் கூட்​டமைப்பு அறி​வித்​துள்ளது.

அளவுக்கு அதி​க​மான பணி நெருக்​கடி காரண​மாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட் டியல் (எஸ்​ஐஆர்) பணி​களை நவ.18 முதல் முற்​றி​லும் புறக்​கணிக்​கும் போராட்​டத்தை வரு​வாய்த் துறை அலு​வலர் சங்​கம் உள்பட பல்வேறு சங்​கங்​களை உள்​ளடக்​கிய வரு​வாய்த் துறை சங்​கங்களின் கூட்​டமைப்பு (பெரா) அறி​வித்​திருந்​தது. அதன்​படி, நேற்று முன்தினம் (செவ்​வாய்க்​கிழமை) முதல் எஸ்​ஐஆர் படிவங்களை பெறு​வது, ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்​வது உள்​ளிட்ட பணி​களை புறக்​கணித்​தனர்.

தமிழகம் முழு​வதும் கிராம உதவி​யாளர்​கள், கிராம நிர்​வாக அலு​வலர்​கள், வரு​வாய் ஆய்​வாளர்​கள், துணை வட்​டாட்​சி​யர்​கள், வட்​டாட்​சி​யர்​கள், சர்​வேயர்​கள், கள உதவி​யாளர்​கள் என ஏறத்​தாழ 42 ஆயிரம் பேர் இப்​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் அனைத்து மாவட்​டங்​களி​லும் பணி​கள் பாதிக்​கப்பட்​டன.

இதைத்​தொடர்ந்​து, வரு​வாய்த் துறை சங்​கங்​களின் கூட்​டமைப்பு மாநில ஒருங்கிணைப்​பாளர்​களுடன் தமிழக அரசின் வருவாய்த்​துறை செயலர்பி.அ​மு​தா, வருவாய் நிர்வாக ஆணை​யர் சாய்​கு​மார் பேச்​சுவார்த்தை நடத்​தினர்.

அதில் கோரிக்​கைகளை ஏற்​ப​தாக அரசு உறுதி அளித்​த​தால் எஸ்​ஐஆர் பணி புறக்​கணிப்பு போராட்​டத்தை தற்​காலிக​மாக தள்​ளி​வைத்​திருப்​ப​தாக வரு​வாய்த் துறை சங்​கங்​களின் கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக ​கூட்​டமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் முரு​கையன், சி.கு​மார், அ.பூப​தி, அண்​ணா. குபேரன், எஸ்​.ரவி ஆகியோர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அரசுடனான பேச்​சு​வார்த்​தை யில் அனைத்து கோரிக்கைகளை​யும் ஏற்​ப​தாக அரசு உறுதி அளித்​தது.

அதோடு 19-ம் தேதி (நேற்​று) அனைத்து மாவட்டஆட்​சி​யர்​களும் பெரா கூட்​டமைப்​பின் மாவட்ட ஒருங்கிணைப்​பாளர்​களை அழைத்​து, இனிமேல் அதி​க​மான பணிநெருக்கடிகள் இருக்​காது என்​றும் விடு​முறைநாட்களில் பணி செய்​யும் நிர்பந்​தம் ஏற்​ப​டாது என்​றும் எனவே, எஸ்​ஐஆர் பணிக்கு ஒத்​துழைப்பு தருமாறும் கேட்​டுக்​கொண்​டனர்.

மேலும் வரு​வாய்த் துறை செயலர், வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் ஆகியோர் பெரா மாநில ஒருங்​கிணைப்​பாளர்​களிடம் 18-ம் தேதி மீண்​டும் பேசினர்.

அப்​போது வெளி​மாவட்​டங்​களில் முகாம் பணி​யில் இருக்​கும் தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யும், இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் துணை தேர்​தல் ஆணை​யர்​களும் சென்னைவந்​ததும் இதுகுறித்து பேசி உரியஆணை​கள் வழங்​கு​வ​தாக உறுதி அளித்​தனர். அவர்​களின் வேண்​டுகோளின்பேரில் எங்​கள் போ​ராட்​டத்தை தற்​காலிக​மாக தள்​ளி​வைத்​துள்​ளோம். இவ்​வாறு கூறியுள்​ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in