“அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை” - பெ.சண்முகம்

“அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை” - பெ.சண்முகம்
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘எவிடென்ஸ்’ அமைப்பு சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பெ.சண்முகம் பேசியது: “தமிழகத்தில் மருத்துவ சேவை பெறுவதற்கு மக்கள் அதிகளவில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. சாதாரண மக்களால் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத அளவுக்கு மருத்துவக் கட்டணங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை.

அனைத்து சாதியிலும் முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள் இருக்கின்றனர். சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புபவர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்கள் சாதியக் கட்டமைப்புகளிலிருந்து விடுபடப் போராட வேண்டும். அவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள்தான் சமூகத்தில் சாதியை ஒழிக்க முடியும். அப்போதுதான் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

கிறிஸ்தவர்கள் தமிழகத்தில் கல்வியிலும், மருத்துவத்திலும் சிறப்பான பணியை செய்துள்ளனர். இன்றைய அரசியல் சூழலில் மதவாதம் தலைதூக்கியுள்ளது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.

“அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை” - பெ.சண்முகம்
திமுக கூட்டணிக்கு எதிராக வேட்புமனு; விசிக நிர்வாகி நீக்கம்: திருமாவளவன் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in