பனையேறும் தொழிலாளி மீதான துப்பாக்கிச் சூடு: தென்காசி போலீஸ் விசாரிக்க தடை

Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளத்​தைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி மீது போலீ​ஸார் நடத்​திய துப்​பாக்​கிச் சூடு வழக்கை தென்​காசி மாவட்ட போலீ​ஸார் விசா​ரிக்க உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

தென்​காசி மருதம்​புத்​தூரைச் சேர்ந்த பெரு​மாள் சேட் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: எனது மகன் மணி​கண்​டன் பனை மரம் ஏறி பதநீர் இறக்​கும் தொழில் செய்து வரு​கிறார்.

கடந்த 7-ம் தேதி கள் இருப்பதாக ேசாதனை நடத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எஸ்ஐ இசக்​கி​ராஜா துப்​பாக்கியால் சுட்​டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும். இழப்​பீடு வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. இந்த வழக்​கில் புதிய உத்​தரவு பிறப்​பிக்​கும் வரை சம்​பந்​தப்​பட்ட போலீ​ஸார் இந்த வழக்கை விசா​ரணை செய்​யக் கூடாது. சிபிஐ, எஸ்ஐ இசக்​கி​ராஜா ஆகியோர் பதில் மனு தாக்​கல் செய்ய உத்தரவிட்டார்.

Santhanakoodu Festival
அதிமுகவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை தேவை: பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in