எஸ்ஐஆர் மூலம் பிஹார் தொழிலாளர்களை இணைக்க முயற்சி: செல்வப்பெருந்தகை கண்டனம்

எஸ்ஐஆர் மூலம் பிஹார் தொழிலாளர்களை இணைக்க முயற்சி: செல்வப்பெருந்தகை கண்டனம்
Updated on
1 min read

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப் பெருந்​தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் சிறப்பு தீவிர திருத்​தம் மூலம் 65 லட்​சம் வாக்காளர்​கள் நீக்​கப்​பட்​டனர். அதன் மூலம் அங்கு பாஜக வெற்றி பெற்​றுள்​ளது.

இந்த உத்​தி​யைப் பயன்​படுத்தி தமிழகத்​தி​லும் முறை​கேடு​களில் ஈடுபட பாஜக திட்​ட​மிட்​டுள்​ளது. பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்​றிருந்​தா​லும், தமிழக வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்து வாக்​களிக்​கலாம் என்ற தேர்​தல் ஆணைய அறி​விப்​பைப் பயன்​படுத்தி 41 தொகு​தி​களை குறி​வைத்து பாஜக செயல்​படு​கிறது.

இந்​திய குடிமகன் என்று நிரூபித்து வாக்​காள​ராக சேர்க்க 12 ஆவணங்​களில் ஏதேனும் ஒன்​றைக் காட்ட வேண்​டுமென்று ஏற்​கெனவே கூறப்​பட்​டது.

தற்​போது 13-வது ஆவண​மாக, பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்​றிருந்​தால், தமிழகத்​தில் நடக்​கும் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் அந்தஆவணத்தை சமர்ப்​பித்து வாக்​காள​ராக சேர்த்​துக்​கொள்ள தேர்​தல் ஆணையம் அனு​ம​தித்​துள்ளது. இது ​தமிழக விரோத நடவடிக்​கை. இதை அனு​ம​திக்க முடி​யாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in