கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை ரத்து: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தோரின் குடும்ப உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்ட அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. அத்​துடன், எதிர் மனு​தா​ரர்​கள் பதில் அளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​தது.

கரூர் மாவட்​டம், வேலுச்​சாமிபுரத்​தில் கடந்த ஆண்டு செப்​டம்​பரில் தற்​போதைய முதல்​வர் விஜய் பங்​கேற்ற தவெக தேர்​தல் பரப்​புரைக் கூட்​டத்​தில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​டது. அதில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 140-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில், தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்​தது. இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்​குக் கருணை அடிப்​படை​யில் 31 பேருக்கு அரசு பணி வழங்​கப்​பட்​டது. இதற்​கான பணி ஆணையை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

ஆனால், அரசுப் பணி ஆணை வழங்​கு​வதற்கு எதி​ராக நாம் தமிழர் கட்​சி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் தீரன் திரு​முரு​கன், சீனி அகமது உள்​ளிட்​டோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் மதுரை கிளை​யில் வழக்கு தொடர்ந்​தனர். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் பாதிக்​கப்​பட்​டோரின் குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கிய அரசு ஆணையை ரத்து செய்​தது.

இதையடுத்​து, உயர் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு, அரசுப் பணி ஆணை ரத்​தால் பாதிக்​கப்​பட்ட பிர​பாகரன் செல்​வகு​மார், ஆனந்த ஜோதி, உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​கள், உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, தமிழ்​நாடு அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் அபிஷேக் சிங்வி மற்​றும் முகுல் ரோத்​தஹி ஆகியோர், ‘‘தமிழக அரசின் கொள்கை முடி​வின் அடிப்​படை​யில் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்​கப்​பட்​டது. அரசின் கொள்கை முடி​வில் உயர் நீதி​மன்​றம் எவ்​வாறு தலை​யிட முடி​யும்? மேலும், நீதி​மன்​றம் தாமாக எவ்​வாறு ரத்து செய்ய முடி​யும்? ஒரு பொதுநல மனு மூலம் அரசின் பணி ஆணையை எவ்​வாறு ரத்து செய்ய முடி​யும்​?’’ என்று கேள்வி​களை எழுப்​பினர்.

அப்​போது, எதிர் மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் வேலன், ‘‘கருணை அடிப்​படை​யில் பணி வழங்​கு​வது தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றம் பல்​வேறு வழி​காட்​டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. அந்த வழி​காட்​டு​தல்​கள் கரூர் நெரிசலில் சிக்​கிய​வர்​களுக்கு அரசு பணி வழங்​கிய​தில் பின்​பற்​றப்​பட​வில்​லை.

அதனால்​தான் உயர் நீதி​மன்​றம் பணி ஆணையை ரத்து செய்​தது. மேலும், சம்​பவத்​துக்​குக் காரண​மான கட்​சியே தற்​போது ஆட்​சி​யில் இருப்​ப​தால், வேலை வழங்​கும் முடிவு என்​பது ‘நலன்’ என்ற வரையறைக்​குள் வராது’’ என்று வாதாடி​னார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், ‘‘கூட்ட நெரிசல் ஏற்​பட்டு சிலர் உயி​ரிழந்து விட்​டனர். அது ஒரு துர​திருஷ்ட​வச​மான சம்​பவம். அப்​படி இருக்​கை​யில் அரசு அந்த குடும்​பத்​தைச் சேர்ந்த ஒரு நபருக்கு அரசு வேலை வழங்​கு​கிறது என்ற பட்​சத்​தில், அந்த வேலையை வழங்​கக் கூடாது என கூறு​வதற்கு நீங்​கள் யார்? ஒரு குடும்​பத்​தில் ஒரு​வர் மட்​டுமே வேலை பார்க்​கும் நபராக இருக்​கலாம். அவர்​தான் குடும்​பத்தை வழி நடத்​துபவ​ராக இருக்​கலாம்.

அவ்​வாறான ஒரு​வர் இது​போன்று சம்​பவத்​தில் உயி​ரிழந்​திருந்​தால் அவருக்கு வேலை வழங்​கக் கூடாது என்று கூறுகிறீர்​களா? இந்த விவ​காரத்​தில் தயவுசெய்து நீங்​கள் அரசி​யலைப் புகுத்த வேண்​டாம்’’ என நீதிப​தி​கள் எதிர் மனு​தா​ரர்​களிடம் தெரி​வித்​தனர்.

அதன்​பின்​னர், ‘‘கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கிய அரசு ஆணையை ரத்து செய்த உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு இடைக்​கால தடை வி​திக்​கப்​படு​கிறது. வழக்​கில் சம்​பந்​தப்​பட்ட எதிர் மனு​தா​ரர்​கள் பதில் அளிக்க நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​படு​கிறது’’ என்​று உத்​தர​விட்​ட நீதிப​தி​கள்​ வழக்​கை ஒத்​திவைத்​தனர்​.

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
“இளைஞர்களின் நலனுக்காக தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள்...” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in