உயர் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வை 3 வாரங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி/ சென்னை: ​காலி​யாக உள்ள உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​களை நிரப்​பும் வகை​யில் கூடு​தல் கலந்​தாய்வை 3 வாரங்​களுக்​குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் மருத்​து​வக் கலந்​தாய்வு முடிந்த பிறகு காலி​யாக இருந்த 153 உயர் சிறப்பு (சூப்​பர் ஸ்பெஷாலிட்​டி) மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​தி​யத் தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​பட்​டன. அவ்​வாறு ஒப்​படைத்​த​தில் 40 இடங்​கள் நிரம்​பாமல் இருந்​த​தால், கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதத்​தைக் குறைத்து அந்த இடங்​களை முழு​வது​மாக மீண்​டும் தமிழகத்​திடம் ஒப்​படைக்​கு​மாறு தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இதுகுறித்து மத்​திய அரசு முடி​வெடுக்க உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்தி இருந்​தது.

இந்​நிலை​யில், நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்​மா, அலோக் ஆராதே அமர்​வில் இந்த வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அகில இந்​திய அளவில் உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான காலி இடங்​களை நிரப்ப, தகுதி கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதத்தை 50-ல் இருந்து 30 ஆக குறைப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​தது.

தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் ஆஜரானார். இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: 40 உயர் சிறப்பு மருத்​து​வப்படிப்​புக்​கான இடங்​களை உடனே தமிழகத்​திடம் திருப்பி அளிக்க வேண்​டும். குறைக்​கப்​பட்ட புதிய கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதத்​தின் அடிப்​படை​யில் உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான கூடு​தல் கலந்​தாய்வை 3 வாரங்​களுக்​குள் நடத்தி முடிக்க வேண்​டும்.

முந்​தைய கலந்​தாய்​வில் பங்​கேற்று ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்​தெடுத்​தவர்​கள் இந்த கூடு​தல் கலந்​தாய்​வில் கலந்​து​கொண்​டு, வேறு பிரிவை தேர்வு செய்து தரம் உயர்த்​திக்கொள்ள (அப்​கிரடேஷன்) தமிழகத்​துக்கு மட்​டும் அனு​மதி அளிக்​கப்​படு​கிறது.இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தரவிட்​டனர்​.

உச்ச நீதிமன்றம்
எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in