பிஹாரின் அடுத்த முதல்வர் ஆக சாம்ராட் சவுத்ரிக்கு வாய்ப்பு

அடுத்த வாரம் நிதிஷ் குமார் ராஜினாமா
இடது: சாம்ராட் சவுத்ரி | வலது: நிதிஷ் குமார்

இடது: சாம்ராட் சவுத்ரி | வலது: நிதிஷ் குமார்

Updated on
1 min read

பாட்னா: சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிஹார் முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனையடுத்து, தற்போதைய துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி, பிஹாரின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான நிதிஷ் குமார், பதவியேற்பதற்காக அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவைக் கட்சி கூட்டம் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. அப்போது நிதிஷ் குமார் பிஹார் முதல்வர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி, நிதிஷ் குமாருக்குப் பிறகு பிஹாரின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ள நபராகக் கருதப்படுகிறார். இது குறித்து பாஜகவின் தேசிய தலைமையைச் சந்திப்பதற்காக அவர் புதுடெல்லிக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்தாவது முறையாக முதல்வராகப் பதவி வகித்த நிதிஷ் குமார், மார்ச் 30-ஆம் தேதியன்று பிஹார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். முன்னதாக, அவர் மார்ச் 17-ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில், ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார்.

"பிஹார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராகப் பணியாற்ற வேண்டும்" என்ற தனது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, மார்ச் 5-ஆம் தேதியன்று நிதிஷ் குமார் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

<div class="paragraphs"><p>இடது:&nbsp;சாம்ராட் சவுத்ரி | வலது: நிதிஷ் குமார்</p></div>
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை அறிவித்தது ஈரான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in