

சேலம்: சேலம் இரும்பாலை சாலையில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு பால், நெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆவின் பண்ணையில் பணியாற்றும் துணைப் பொது மேலாளர் சாரதாவின் அறையில் நெய் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, ஆவின் உயரதிகாரிகள் துணைப் பொது மேலாளர் அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது அறையில் கணக்கில் வராமல் சுமார் 40 லிட்டர் அளவிலான நெய் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து பால் வளத்துறை ஆணையர் அஜய் யாதவ் சாரதாவை பணியிடை நீக்கம் செய்தார்.