தலைமைச் செயலராக சாய்குமார் பொறுப்பேற்பு: லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக சந்தீப் மிட்டல் பதவியேற்றார்

தேர்தல் ஆணையம் திடீர் நடவடிக்கை
தலைமைச் செயலர் சாய்குமார், லஞ்ச ஒழிப்பு டிஜிபி சந்தீப் மிட்டல்

தலைமைச் செயலர் சாய்குமார், லஞ்ச ஒழிப்பு டிஜிபி சந்தீப் மிட்டல்

Updated on
2 min read

சென்னை: தமிழகத் தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் ஆகியோரை தேர்​தல் ஆணை​யம் திடீரென மாற்றி உள்​ளது. புதிய தலை​மைச் செயல​ராக எம்​.​சாய்​கு​மார் பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அதே​போல் லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி​யாக சந்​தீப் மிட்​டல் பதவி​யேற்​றார்.

தமிழகத் தேர்​தலுக்​கான அறி​விப்பு மார்ச் 15-ம் தேதி வெளி​யானது. அன்று முதல் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தன. தமிழகம் முழு​வதும் தொகுதி வாரி​யாக பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்​புக் குழுக்கள் கண்​காணிப்​புத் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதுத​விர, தமிழகத்​துக்கு 250 கம்​பெனி துணை ராணுவப் படை​யும் ஒதுக்​கப்​பட்​டது. பறக்கும் படையினர் தீவிரமாகக் கண்காணித்து பணம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வேட்பு மனுத்தாக்​கல் முடிந்து நேற்று முன்​தினம் மனுக்​கள் பரிசீலனை நடை​பெற்​றது. இன்று இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யாக உள்​ளது. ஏப்​.23-ம் தேதி வாக்​குப் பதிவு நடை​பெறுகிறது. தேர்​தல் நடைபெறும் மாநிலங்​களில் 3 ஆண்​டு​களாக ஒரே இடத்​தில் பணி​யாற்​றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் மற்​றும் உயர் பொறுப்​பு​களில் இருப்​பவர்​கள், இதர அதி​காரி​களை மாற்ற இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது.

வழக்​க​மாகப் புகார்​களின் அடிப்​படை​யில் அதி​காரி​கள் மாற்​றம் நடை​பெறும். அந்த வகை​யில் ஏற்​கெனவே, விருதுநகர், நாமக்​கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.​பி.க்​கள் மாற்​றப்​பட்​டனர். இந்​நிலை​யில், தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி மறுத்​தது, காவல் துறை போதிய பாது​காப்பு வழங்​காதது குறித்த புகார்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்​குச் சென்​றன.

இதையடுத்​து, கடந்த ஏப்​.2-ம் தேதி தமிழகக் காவல் துறை​யின் சட்​டம் ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்​கட ​ராமன் மாற்றப்​பட்​டார். அவருக்​குப் பதில் சந்​தீப் ராய் ரத்​தோர் நியமிக்​கப்​பட்​டார். தாம்​பரம் காவல் ஆணை​யர் ஏ.அமல்​ராஜ் மாற்​றப்​பட்​டார். அவருக்​குப் பதில் சஞ்​சய் குமார், மதுரை காவல் ஆணை​ய​ராக இருந்த ஜெ.லோக​நாதனுக்​குப் பதில் அபிஷேக் தீக் ​ஷித் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டனர்.

மேற்கு மண்டல ஐஜி.​யாக இருந்த சரவண சுந்​தருக்கு பதில் ரம்யா பாரதி நியமிக்​கப்​பட்​டார். தவிர சேலம் ஆட்​சி​ய​ராக அருண் தம்​பு​ராஜ், தூத்​துக்​குடி ஆட்​சி​ய​ராக விசு மகாஜன் ஆகியோ​ரும் நியமிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், தமிழகத் தலை​மைச் செயல​ராக இருந்த நா.​முரு​கானந்​தம் மற்​றும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் ஆகிய இரு​வரை​யும் மாற்றி தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தர​விட்​டுள்​ளது.

தலை​மைச் செயலர்: நா.​முரு​கானந்​தத்​துக்​குப் பதில், வரு​வாய் நிர்​வாக ஆணை​ய​ராக உள்ள எம்​.​சாய்​கு​மாரை புதிய தலை​மைச் செயல​ராக நியமித்​துள்​ளது. அவர் நேற்று இரவு பொறுப்​பேற்றுக் கொண்டார். அதே​போல், லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி​யாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு டிஜிபி.​யாக இருந்த சந்​தீப் மிட்​டல் நியமிக்​கப்​பட்​டார். இவரும் நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டார்.

சாய்​கு​மார்: தமிழக பிரி​வில் 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் அதி​காரி​யான டாக்​டர் எம்​.​சாய்​கு​மார், பொதுப் பணித்​துறை செயலர், மின் வாரி​யத் தலை​வர், தமிழ்​நாடு தொழில் முதலீட்​டுக் கழகத் தலை​வர், செய்​தித்​தாள் காகித நிறு​வனத் தலை​வர் போன்ற முக்​கியப் பொறுப்​பு​களை வகித்​துள்​ளார். கடந்த அதி​முக ஆட்​சி​யில் முதல்​வ​ராக பழனி​சாமி இருந்த போது, முதல்​வரின் செயலர்​களில் முதன்​மை​யானவ​ராக சாய்​கு​மார் இருந்​தார்.

சந்​தீப் மிட்​டல்: கடந்த 1995-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதி​காரி​யான சந்​தீப் மிட்​டல், சைபர் பாது​காப்பு, குற்​ற​வியல் புல​னாய்​வில் நிபுணத்​து​வம் பெற்​றவர். தமிழகத்​தில் சைபர் குற்​றத் தடுப்​பு, டிஜிட்​டல் விசா​ரணை, சைபர் ஆளுமை கட்​டமைப்​பு​களை வலுப்​படுத்​தி​ய​தில்​ முக்​கிய பங்​​காற்​றி​யுள்​ளார்.

திஹார்​ சிறை ​பாது​காப்​புத்​ துறை தலை​வர்​, போதைப்​ பொருள்​ தடுப்​புப்​ பிரிவு (டெல்​லி) இயக்​குநர்​, தமிழகக்​ ​காவல்​ துறை​யின்​கடலோரப்​ ​பாது​காப்​பு குழு​மக்​ கூடு​தல்​ டிஜிபி போன்​ற பதவி​களை​யும்​ இவர்​ வகித்​துள்​ளார்​.

ஆணையத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிகாரிகளை மாற்றி ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது.

நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத்துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருக்கிறது. இது ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு டிஜிபி, தலைமைச் செயலரை மாற்றவில்லை. பிஹார் தேர்தலின் போதும், டிஜிபி, தலைமைச் செயலரை மாற்றவில்லை. தமிழகத்தில் மட்டும் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கின்றனர். அவர்களை பாஜக தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோரைமாற்ற பாஜக தூண்டிவிடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழகத்தில் பாஜக மண்ணைக் கவ்வப் போவது உறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>தலைமைச் செயலர் சாய்குமார்,&nbsp;லஞ்ச ஒழிப்பு டிஜிபி சந்தீப் மிட்டல் </p></div>
தொகுதி மறுவரையறை விஷயத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறதா? - ஸ்டாலின் காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in