எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்​வு​களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ச.தமிழ்ச்செல்வனுக்கு ஏற்கெனவே சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. இவ்விருது குறித்து அவர், ‘தனக்கு இந்தப் புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது. 50-க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருது வென்றவர்கள் விவரம்:

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
விளாத்திகுளம் மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in