

நாகர்கோவில்: அகில இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கடந்த 17-ம் தேதி கன்னியாகுமரி வருகை தந்தார். விவேகானந்தா கேந்திராவில் தங்கி, கேந்திரா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் சன்னதி தெருவில் உள்ள 24-வது சக்தி பீடமான தியாக சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.