நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த் துறை செயலர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த் துறை செயலர் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடலூர் மாவட்​டம் சிதம்​பரத்​தில் தேசிய நெடுஞ்​சாலைகள் பிரி​வில் நிலம் கையகப்​படுத்​தும் சிறப்பு வட்​டாட்​சி​ய​ராக பணி​யாற்​றிய ஆர்​.ரங்​க​ராஜன் 2014-ல் மோசடி புகார் காரண​மாக பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டார்.

இதனால், அவரை ஓய்வு பெற​வும் தமிழக அரசு அனு​ம​திக்​க​வில்​லை. இதை எதிர்த்​தும், தனக்​கான ஓய்​வூ​தி​யப் பணப் பலன் கோரி​யும் உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2019-ல் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், ‘துறை ரீதியி​லான விசா​ரணை அல்​லது குற்ற விசா​ரணை​யைக் காரணம் காட்டி ஓய்​வூ​திய பணப் பலன்​களை நிறுத்தி வைக்க முடி​யாது’ என்று கூறி, அவருக்​கான ஓய்​வூ​தி​யப் பலன்​களை 12 வாரங்​களில் வழங்க உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்கை உயர் நீதி​மன்​றம் கடந்த 2023-ல் தள்​ளு​படி செய்​தது. இதையடுத்​து, தமிழக வருவாய்த் துறை செயலர் வி.​ராஜா ​ராமன், வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் கே.பிர​பாகர், கடலூர் மாவட்ட ஆட்​சி​யர் அருண் தம்​பு​ராஜ் ஆகியோ​ருக்கு எதி​ராக ரங்​க​ராஜன் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், ஆர்​.சக்​திவேல் அமர்​வு, ‘மனு​தா​ரருக்கு வரும் 17-ம் தேதிக்​குள் பணப் பலன்​களை வழங்க வேண்​டும். இல்​லா​விட்​டால், தமிழக வருவாய்த் துறை செயலர் ராஜா​ராமன் அன்று ஆஜராக வேண்​டும்’ என்​று உத்​தர​விட்​டுள்​ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த் துறை செயலர் ஆஜராக உத்தரவு
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 200 பேருக்கு 10 ஆண்டாக ஓய்வூதிய பலன் ரூ.95 கோடி நிலுவை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in