கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று முதல் வழக்கமான மின்சார ரயில் சேவை

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று முதல் வழக்கமான மின்சார ரயில் சேவை
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் 10, 11-வது நடைமேடைகளில் நடை​பெற்று வந்த மேம்​பாலப் பணி முடிந்​துள்​ள​தால், கடற்​கரை - செங்​கல்​பட்டு தடத்​தில் இன்று முதல் வழக்​க​மான கால அட்​ட​வணைப் படி, மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும் என, சென்னை ரயில்வே கோட்​டம் அறி​வித்​துள்​ளது.

சென்​னை, எழும்பூர் ரயில் நிலை​யத்​தில், ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணி​கள் நடை​பெற்று வருகின்றன. இதன் ஒரு பகு​தி​யாக, பிரம்​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​கள் நடை​பெறுகின்றன.

இந்த ரயில் நிலை​யத்​தின் 10, 11-வது நடைமேடைகளில் இதற்​கான பணி​கள் தொடங்​கிய​தால், கடற்​கரை - செங்​கல்​பட்டு தடத்​தில், கடந்த பிப்​.19-ம் தேதி முதல், 44 மின்​சார ரயில்​களின் சேவை ரத்து செய்​யப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக, 45 ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

அதாவது, 204 ரயில் சேவை​களில் இருந்து 115 சேவை​களாக குறைக்​கப்​பட்​டன. இதுத​விர, தற்​காலிக கால அட்​ட​வணை அமைத்​து, 20 நிமிடத்​துக்கு ஒரு மின்​சார ரயில் இயக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், நடைமேடை 10, 11-ல் ஏப்​.5-ம் தேதி​யில் முடிக்க வேண்​டிய மேம்​பாலம் அமைக்​கும் பணி​களை முன்​கூட்​டியே முடித்​துள்​ள​தால், இன்று (3-ம் தேதி) முதல் வழக்​க​மான காலஅட்​ட​வணைப் படி மின்​சார ரயில் சேவை மீண்​டும் இயக்​கப்​படு​கிறது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறுகையில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில், 10, 11-வது நடைமேடை​யில் நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​கள் பிப். 19-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இப்பணி​கள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, வெள்​ளிக்​கிழமை (இன்​று) முதல் வழக்​க​மான பழைய கால அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும். வார நாட்​களில் 212 மின்​சார ரயில் சேவை​களும், ஞாயிறுக்​கிழமை​களில் 189 மின்​சார ரயில் சேவை​களும் இயக்​கப்​படும் என்றனர்.

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று முதல் வழக்கமான மின்சார ரயில் சேவை
திருச்சியில் விஜய் பிரச்சாரத்தால் பள்ளி அருகே இடையூறு: 10-ம் வகுப்பு தேர்வு எழுத 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in