என்ஐஏ தொடர்ந்த வழக்கில் இருந்து இங்கிலாந்து நபரை விடுவிக்க மறுப்பு

என்ஐஏ தொடர்ந்த வழக்கில் இருந்து இங்கிலாந்து நபரை விடுவிக்க மறுப்பு
Updated on
1 min read

சென்னை: கடந்த 2004 முதல் 2009 வரையி​லான கால​கட்​டத்​தில் ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற தடை செய்​யப்​பட்ட தீவிர​வாத அமைப்​புக்கு நிதி திரட்​டிய​தாக​வும், அந்த அமைப்​புக்​காக சென்​னை​யில் ஆள்​சேர்க்கை நடத்​தி​ய​தாக​வும் இங்​கிலாந்து குடிமகன் அஸிஸ் அஹமது என்​பவரை தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) அதி​காரி​கள் கடந்த 2024-ம் ஆண்டு கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் இருந்து தன்னை விடுவிக்​கக் கோரி அஸிஸ் அஹமது சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் அனிதா சுமந்த் மற்​றும் சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், தீவிர​வாத அமைப்​புக்கு நிதி திரட்​டியது, ஆட்​சேர்க்​கை​யில் ஈடு​பட்​டது, தீவிர​வாத செயல் எனக்​கூறி அஸிஸ் அகமதுவை வழக்​கில் இருந்து விடுவிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

என்ஐஏ தொடர்ந்த வழக்கில் இருந்து இங்கிலாந்து நபரை விடுவிக்க மறுப்பு
ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை மத்திய அரசு திரும்பப் பெற மாணிக்கம் தாகூர் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in