குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரலில் வாசகர்கள் கோரிக்கை

குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரலில் வாசகர்கள் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களை அதி​கரிக்க வேண்​டும் என்று ‘இந்து தமிழ் திசை’ உங்​கள் குரலில் வாசகர்​கள் கோரிக்கை விடுத்​தனர்.

இதுதொடர்​பாக தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த வாசகர்​கள் உங்​கள் குரல் சேவை​யில் கூறிய​தாவது: பொது​வாக ஒவ்​வொரு ஆண்​டும் டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் 10ஆ​யிரம், 12ஆ​யிரம் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்.

ஆனால், இந்த ஆண்டு குரூப்-4 தேர்​வில் முதலில் 3,935 காலி​யிடங்​கள் அதி​கரிக்​கப்​பட்டு பின்​னர் கூடு​தலாக 727 இடங்​கள் சேர்க்​கப்​பட்​டு, தற்​போது மொத்த இடங்​கள் 4,662 என்ற அளவில்​தான் உள்​ளது.

இந்த காலி​யிடங்​களுக்கு 13 லட்​சம் பேர் தேர்​வெழு​தினர். இத்​தனை லட்​சம் பேருக்கு இந்த குறைந்த காலி​யிடங்​கள் எப்​படி போது​மான​தாக இருக்​கும். அது​மட்​டுமின்றி இது​வரை இல்​லாத வகை​யில் இந்த ஆண்டு குரூப்-4 தேர்வு மிக​வும் கடின​மாக இருந்​தது.

அரசு துறை​களில் லட்​சக்​கணக்​கான காலிப்​பணி​யிடங்​கள் உள்​ளன. இதனால், ஏற்​கெனவே பணி​யில் இருக்​கும் ஊழியர்​களுக்கு பணிச்​சுமை அதி​கரித்​துள்​ளது. நான்​கு, ஐந்து ஊழியர்​கள் பார்க்​கக்​கூடிய வேலைகளை ஒரே ஊழியர் பார்க்க வேண்​டிய கட்​டாயச்​சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

பணிச்​சுமையை குறைக்​கு்ம் வகை​யில் அரசு துறை​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்ப வேண்​டும் என்று ஊழியர்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதுதொடர்​பான போராட்​டங்​களும் அவ்​வப்​போது நடத்​தப்​படு​கின்​றன.

படித்து முடித்​து​விட்டு லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் வேலை​வாய்ப்​பின்றி இருக்​கிறார்​கள். எனவே, தற்​போது நடத்​தப்​பட்​டுள்ள குரூப்-4 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களை கணிச​மான அளவு அதி​கரிக்க வேண்​டும்.

காலி​யிடங்​களை 10 ஆயிரம் அளவுக்கு அதி​கரித்​தால் கட் ஆஃப் மதிப்​பெண்​ணில் விளிம்பு நிலை​யில் உள்ள 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தேர்​வர்​கள் பயன்​பெறு​வர். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “குரூப்-4 தேர்வை பொருத்​த வரை​யில், பல்​வேறு அரசு துறை​களிட​மிருந்து காலிப்​பணி​யிடங்​கள் வந்​து​கொண்​டிருக்​கின்​றன.

சான்​றிதழ் சரி​பார்ப்பு பணி​கள் நடை​பெறு​வது வரை​யிலும் புதிய காலிப்​பணி​யிடங்​களை சேர்க்​கலாம். அந்த வகை​யில், குரூப்-4 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களின் இடங்​கள் எண்​ணிக்கை இன்​னும் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது” என்று தெரிவித்தனர்.

குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரலில் வாசகர்கள் கோரிக்கை
பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் அசத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in