ராமேசுவரத்தில் இருந்து மண்டபம் வரை பயணிகள் படகு சேவை தொடங்க கடல்சார் வாரிய அதிகாரிகள் ஆய்வு

பாம்பன் பாலம் பகுதியில் படகு மூலம் நடந்த ஆய்வு.

பாம்பன் பாலம் பகுதியில் படகு மூலம் நடந்த ஆய்வு.

Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமேசுவரத்​துக்கு வரும் சுற்​றுலாப் பயணி​கள், ஆன்​மிக பக்​தர்​கள் மற்​றும் பொது​மக்​கள் கடல் வழி​யாகப் பயணித்து பாம்​பன் ரயில்வே செங்​குத்து தூக்​குப் பாலம் மற்​றும் சாலை பாலத்​தின் அழகை​யும், கடல் அழகை​யும் ரசிப்​ப​தற்​காக பயணி​கள் படகு போக்​கு​வரத்து தொடங்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​தது.

அதன்​படி இப்​படகு சேவை ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யில் தொடங்​கி, பாம்​பன் பாலம் மற்​றும் பாம்​பன் கடல் கால்​வாய் வழி​யாக மண்​டபம் பகு​தி​யைச் சென்​றடைய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யில் இருந்து பாம்​பன் பாலம் வழி​யாக மண்​டபம் செல்​லும் தூரம், கடலின் ஆழம், பாம்​பன் புதிய ரயில்வே செங்​குத்து தூக்கு பாலம் வழி​யாக பயணி​கள் படகு கடந்து செல்​வதற்​கான உயரம் உள்​ளிட்​ட​வை​களை, தமிழ்​நாடு கடல்​சார் வாரி​யம் ராமேசுவரம் துறை​முக அதி​காரி கேப்​டன் மெனக்​சா, கடல்​சார் வாரிய சென்னை ஆலோ​சனைக் குழு​வினர் நேற்று ஆய்வு செய்​தனர்.

அப்​போது முதற்​கட்​ட​மாக பயணி​கள் படகு சேவை தொடர்பான ஆய்​வு​களை​ மேற்​கொண்டனர். இந்த ஆய்வு முடி​வின் அடிப்​படை​யில் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யில் இருந்து பாம்​பன் பாலம் வழி​யாக மண்​டபத்​துக்கு விரை​வில் புதிய உள்​நாட்​டுப் பயணி​கள் படகுப் போக்​கு​வரத்து சேவை தொடங்​கு​வதற்கான பணிகள் தொடங்கும் என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>பாம்பன் பாலம் பகுதியில் படகு மூலம் நடந்த ஆய்வு. </p></div>
“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” - பிரதமர் மோடி சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in