இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள். படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள். படம்: எல்.பாலச்சந்தர்

Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள தமிழக மீனவர்​களை விடு​தலை செய்​யக்​கோரி ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் தொடர் வேலைநிறுத்​தப் போராட்​டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்​கினர்.

ராமேசுவரத்​தில் இருந்து விசைப்​படகு​களில் மீன்​பிடிக்​கச் சென்ற 29 மீனவர்​கள் எல்லை தாண்டி வந்​த​தாக, இலங்கை கடற்​படை​யால் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், நீதி​மன்​றங்​களில் சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்டு தண்​டனை கைதி​களாக 20-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் பல்​வேறு சிறை​களில் உள்​ளனர்.

இவர்​களை விடு​தலை செய்ய மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி தொடர் வேலைநிறுத்​தப் போராட்​டத்தை ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்​கினர். இதையடுத்​து, 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​கள் கடலுக்குச் செல்​லாமல் ராமேசுவரம் மீன்​பிடி இறங்​குதளத்​தில் நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்​டிருந்​தன.

இந்​திய - இலங்கை மீனவர் பிரச்​சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்​ப​தற்கு இரு நாட்டு மீனவர்​களின் பேச்​சு​வார்த்​தைக்கு ஏற்​பாடு செய்ய வேண்​டும். 2018-ம் ஆண்​டிலிருந்து 2026-ம் ஆண்டு வரை இலங்கை கடற்​படை​யின​ரால் ஏராள​மான விசைப்​படகு​கள் சிறைபிடிக்​கப்​பட்​டுள்​ளன. அதன் உரிமை​யாளர்​களுக்கு மத்​திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர். மேலும், இக்​கோரிக்​கைகளை வலி​யுறுத்தி செப். 1-ம் தேதி தங்​கச்​சிமடத்​தில் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​து​வது என்றும் முடிவு செய்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள். படம்: எல்.பாலச்சந்தர்</p></div>
திண்டுக்கல் அருகே வேன் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு: விபத்தை பார்த்து மயங்கி விழுந்த பாட்டிக்கு தீவிர சிகிச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in