“அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி” - ராமதாஸ் வேதனை

“அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி” - ராமதாஸ் வேதனை
Updated on
1 min read

​விழுப்​புரம் மாவட்​டம், திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறிய​தாவது: பொய்​யும், புரட்​டை​யும் அரசி​ய​லாகக் கொண்டு அன்​புமணி தலை​மையி​லான கூட்​டம் நடந்து கொள்​கிறது. பாமக​வின் அடிப்​படை உறுப்​பினர் பதவி​யில் இருந்தே அக்​கூட்​டத்தை நீக்கி விட்​டேன்.

பொய் பொய்​யாக பேசுவது, ஏளன​மாக பேசுவது, மனம் புண்​படும்​படி பேசுவது என்று என்னை மட்​டுமல்ல, 26 ஆண்​டு​களாக உழைத்த கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் ஜி.கே. மணியை வசை​பாடு​வதை தின​மும் செய்து வரு​கின்​ற​னர்.

என்னை அரசி​யலில் இருந்து ஒழித்து விட வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் அன்​புமணி தலை​மையி​லான பொய்​யர்​கள் கூட்​டம் எதை எதையோ பேசிக்​கொண்டு செயல்​படு​கிறது. தேர்​தல் ஆணை​யத்​தில் உள்ள சில அதி​காரி​களை அன்​புமணி கூட்​டம் வைத்​துக்​கொண்​டு, டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணை​யம் மூலம் வழக்கு போடு​வது என்​பது வேடிக்​கை​யிலும் வேடிக்​கை. இரு முறை வந்த தீர்ப்​பு​களும் எனக்கு சாதக​மாக இருக்​கிறது.

பாமக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​தால், அன்​புமணி பொய்​யாக பேசி மிக​வும் குழம்பி போயிருக்​கி​றார். ஊடகத்​தை​யும் குழப்​பி, மக்​களை​யும் ஏமாற்​றுகி​றார். ஒழுங்கு நடவடிக்கை குழு​வின் பரிந்​துரை​யின் பேரில், பாமக​வில் இருந்து அவர் நீக்​கப்​பட்​டார். தேர்​தல் கூட்​டணி குறித்து பேசி கொண்​டிருக்​கி​றோம். விரை​வில் முடிவு வெளி​யாகும். ‘அய்யா பாமக’ தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக சமூக வலை​தளத்​தில் தகவல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளது குறித்து கேட்​கிறீர்​கள். இதற்​கு, அடுத்த வாரம் பதில் அளிக்​கிறேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

“அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி” - ராமதாஸ் வேதனை
திமுக வெற்றிக்காக நேரடிக் களத்துக்கு வந்த சபரீசன் - ராஜ்யசபாவுக்கு அனுப்ப ராஜபாட்டை தயாராகிறதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in