“காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்” - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி

ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜுனா

ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜுனா

Updated on
1 min read

சென்னை: “ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் திமுக ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது.” என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில், “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத் துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஆதவ் பேசியது என்ன? முன்னதாக கடந்த 12-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதே திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது. 

அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது” என்று கூறியிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாகப் பதிவு செய்துள்ளார்.

<div class="paragraphs"><p>ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜுனா</p></div>
நெல்லை அருகே எரிந்த நிலையில் இருந்த காரில் 4 சடலங்கள் மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in