தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கிலிருந்து வரும் வளிமண்டல காற்றலை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜன.26) உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28 முதல் 31-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜன.29-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்டி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலா 4 செமீ, சென்னை சோழிங்கநல்லூர், உத்தண்டி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
“எதிர்கால தமிழகத்தின் ஹீரோவும் விஜய்தான்” - செங்கோட்டையன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in