“மத்தியில் ஆள்பவர்களின் கொள்கையை ஏற்காத அமைப்புகள் மீது தாக்குதல் நடக்கிறது” - ராகுல் குற்றச்சாட்டு

நீலகிரி கூடலூர் புனித தாமஸ் பள்ளியின் பொன்விழாவில் பழங்குடியினருடன் இணைந்து நடனமாடிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்.

நீலகிரி கூடலூர் புனித தாமஸ் பள்ளியின் பொன்விழாவில் பழங்குடியினருடன் இணைந்து நடனமாடிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்.

Updated on
2 min read

கூடலூர்: மத்​தி​யில்​ ஆள்​பவர்​களின்​ கொள்​கை​யை ஏற்​காத அனைத்​து அமைப்​பு​கள்​ மீதும்​ தாக்​குதல்​ நடக்​கிறது என கூடலூர்​ பள்​ளி விழா​வில்​ மக்​களவை எதிர்க்​கட்​சித்​ தலை​வர்​ ராகுல்​ காந்​தி குற்​றம்​ சாட்​டி​னார்​.

நீல​கிரி மாவட்​டம் கூடலூர் புனித தாமஸ் பள்​ளி​யின் பொன் ​விழா​வில் காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வருமான ராகுல்​காந்தி பங்​கேற்​றார். இதற்​காக ஹெலி​காப்​டர் மூலம் மைசூரில் இருந்து கூடலூர் வந்​தார்.

அங்கு அவர் பழங்​குடி​யினருடன் பொங்​கல் வைத்து நடன​மாடி மகிழ்ந்​தார். அவருக்கு சாலை​யின் இரு​புற​மும் குவிந்​திருந்த மக்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். நிகழ்ச்​சி​யில் அவர் பேசும்​ போது, "ஒரு​வருக்கொரு​வர் அன்​பாக​வும் மற்றவரை மதிக்​கும் ஒரு இந்​தி​யாவை உரு​வாக்க விரும்​பு​கிறேன்.

நீங்​கள் விரும்​புவதைச் செய்​யுங்​கள், சிறப்​பாகச் செய்​யுங்​கள். நீங்​கள் எதை விரும்​பி​னாலும் அதில் சிறந்து விளங்​குங்​கள், உங்​கள் நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக இருங்​கள் என மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கினார்.

பின்​னர் நடந்த கலந்​துரை​யாடலின்​போது அவர் பேசி​யது: அனைவருக்​கும் வாய்ப்பு அளிக்​கும் கல்வி முறை தேவை. பட்​ஜெட்​டில் கல்விக்கு போது​மானநிதி ஒதுக்கி சிறந்த கல்வி நிறு​வனங்​களை உரு​வாக்​கி, வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். நாடு வளர்ச்சி அடைய உற்​பத்​தி​யைப் பற்றி நாம் சிந்​திக்க வேண்​டும்.

சீனா உற்​பத்​தி​யில் ஆதிக்​கம் செலுத்​துகிறது. உள் நாட்​டில் உற்​பத்தி அதி​கரிக்க வேண்​டும். சிறு மற்​றும் நடுத்​தரத் தொழில்​களை நாம் ஊக்​குவிக்க வேண்​டும். இந்​தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் இன்று நமது ஜனநாயக அமைப்பு அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யுள்​ளது.

ஜனநாயகத்தை பாது​காக்க அனை​வரும் குரல் கொடுக்க வேண்​டும். தேர்​தல் ஆணை​யம், பல்​வேறு நிறு​வனங்​கள் அனைத்​தை​யும் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் நாட்டை ஆள்​பவர்​கள் எடுத்​துக்​கொண்டனர். அவர்​களது கொள்​கையை ஏற்​காத அனைத்து அமைப்​பு​கள் மீதும் தாக்​குதல் நடக்​கிறது.

இந்தியாவில் பல மதங்கள், பலவிதமான கலாச்சாரங்கள், பலவிதமான மொழிகள் உள்ளன. வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஒரு மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு, அவர்கள் பேசும் மொழி உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது ஒருமதத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ ஒருவரைத் தாக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை.

நீதி​மன்​றங்​களின் கருத்து மற்​றும் அவற்​றின் அதி​கார வரம்புபற்றி நான் பேச விரும்​ப​வில்லை ஆனால், வளர்ச்​சிக்​காக நமது சுற்​றுச்​சூழலைத் தியாகம் செய்​யக்​கூ​டாது என்​பது மிக​வும் முக்​கி​யம். ஆரவல்லி மலைத் தொடர் போன்ற விஷ​யங்​கள் முற்​றி​லும் பொறுப்​பற்ற செயல். சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்பு இல்​லாமல் வளர்ச்சி இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பின்​னர் தமிழில் ‘அனை​வருக்​கும் பொங்​கல் நல்​வாழ்த்​துக்​கள்’ என வாழ்த்துகளை பகிர்ந்தார். விழா​வில், நீல​கிரி எம்​.பி.ஆ.ரா​சா, அருட்​தந்தை மேத்​யூஸ் மார்க் மாக்​காரி​யாஸ் எபிஸ்​கோப், பள்ளித் தாளாளர் ஜோபி குருத்து கலந்து கொண்​டனர். முன்​ன​தாக, ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ராகுல் காந்​தியை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மற்​றும் நிர்​வாகிகள் வரவேற்​றனர்​.

<div class="paragraphs"><p>நீலகிரி கூடலூர் புனித தாமஸ் பள்ளியின் பொன்விழாவில் பழங்குடியினருடன் இணைந்து நடனமாடிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்.</p></div>
புதுச்சேரியில் அல்மான்ட் இருமல் மருந்துக்கு தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in