தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை

தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை
Updated on
1 min read

சென்னை: தனி​யார் பள்ளி அங்​கீ​கார மோசடி வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் உதவியாளரிடம் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரித்தனர்.

கடந்த திமுக ஆட்​சியின் போது, தனி​யார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்​கீ​காரம் வழங்​குதல் உள்​ளிட்ட பல்​வேறு அரசு ஒப்புதல்​களை பெற்றுத் தரு​வ​தாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்​யப்​பட்​ட​தாக எழுந்த புகார் தொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப் பிரிவு போலீ​ஸார் வழக்குபதிவு செய்​தனர்.

இவ்​வழக்​கில், தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்க கூட்​டமைப்​பின் முன்​னாள் தலை​வர் பி.டி.அரசகு​மார் கடந்த ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்​பட்டார். அவர் மீது குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழும் நடவடிக்கைஎடுக்​கப்​பட்​டது. அவரது உறவினர்​கள் ஆரோக்​கிய​ராஜ், சுரேஷ் ஆகிய இரு​வரும் கைது செய்​யப்​பட்​டனர். இது​வரை 177 புகார்​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக​வும், சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடை​பெற்​றுள்​ள​தாக​வும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்​பாக, அன்​பில் மகேஸ் தொடர்​புடைய 9 இடங்​களில் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அன்​பில் மகேஸிடம் போலீ​ஸார் 8 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.இந்​நிலை​யில், அன்​பில் மகேஸ் உதவி​யாளர் அருண் பிர​காஷிடம் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் நேற்று விசா​ரணை நடத்​தினர். அவரிடம் கேட்​கப்​பட்ட கேள்வி​களும், அதற்கு அவர் அளித்த பதில்​களும் முழு​மை​யாக வீடியோ​வாக​வும் எழுத்​துப்​பூர்​வ​மாக​வும் பதிவு செய்​யப்​பட்​டன. இந்த வி​சா​ரணை இரவு வரை நீடித்​த​தாக காவல் துறை வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை
ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்கிறார் முதல்வர் விஜய்: உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in