மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மீனவர்களின் பிரச்சினைக்கு  கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
Updated on
1 min read

சென்னை: மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வைக்கு வெளியே தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

விவ​சா​யிகள் மற்​றும் மாடு வளர்ப்​பவர்​களின் பொருளா​தா​ரத்தை மேம்​படுத்த அதிக கடன் உதவி வழங்க வேண்​டும்.

கால்​நடைகளுக்​குத் தேவை​யான கம்பு நேப்​பியர், ரெட் நேப்​பியர் உள்​ளிட்ட பசுந்​தாள் தீவனங்​களை அரசு வழங்க வேண்​டும். தீவன உற்​பத்தி குறித்த பயிற்​சியை விவ​சா​யிகளுக்கு அளிக்க வேண்​டும்.

மழைக்​காலங்​களில் கால்​நடைகளுக்கு ஏற்​படும் நோய்​களைத் தடுக்​கத் தடுப்​பூசிகளும், மருந்​துகளும் தட்​டுப்​பாடின்றி கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும். அரசு வழங்​கும் இலவச ஆடு, மாடு திட்​டங்​களில் பயனாளி​கள் தேர்வு முறையை வெளிப்​படை​யாக அறிவிக்க வேண்​டும்.

மீனவர்​களின் பிரச்​சினை​களுக்கு நிரந்​தரத் தீர்வு காண கச்​சத்​தீவை மீட்​டெடுப்​பது ஒன்றே வழி. கடலில் ரசாயனம் மற்​றும் எண்​ணெய் கலப்​ப​தைத் தடுத்​து, மீன் வளம் மற்​றும் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்க வேண்​டும். மீன்​பிடித் தடைக்​காலம் மற்​றும் புயல் காலங்​களில் உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். டீசல் மானி​யத்தை உயர்த்த வேண்​டும்.

மீனவப் பெண்​களுக்​குச் சுய உதவிக்​குழுக்​கள் மூலம் மாற்று வரு​மானத்​துக்​கான வழி​வகைகளைச் செய்ய வேண்​டும். ஆவின் பால் பதப்​படுத்​தும் குளிரூட்​டும் நிலை​யத்தை வேப்​பூரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு அமைக்க வேண்​டும்.

கடந்த 10 ஆண்​டு​களாக நிரப்​பப்​ப​டா​மல் உள்ள கால்​நடை ஆய்​வாளர் மற்​றும் மருத்​து​வர் பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும். கால்​நடைகள் சாலைகளில் திரிவதைத் தவிர்க்க, ஒவ்​வொரு பகு​தி​யிலும் மேய்ச்​சலுக்​கென்று தனி நிலத்தை அரசு ஒதுக்க வேண்​டும். ஜல்​லிக்​கட்டு காளை​களுக்​கும், நாட்டு மாடு வளர்ப்​பவர்​களுக்​கும் அரசு மானி​யம் வழங்க வேண்​டும்.

பீட்டா அமைப்​புக்கு எதி​ராகப் போராடி ஜல்​லிக்​கட்டை மீட்​டெடுத்​த​தில் விஜய​காந்​துக்​கும் தேமு​தி​க​வுக்​கும் முக்​கியப் பங்கு உண்​டு. காங்​கே​யம், புலிக்​குளம் போன்ற நாட்டு இன மாடு​களைப் பாது​காக்க வேண்​டும். மாநிலம் கடனில் இருக்​கும்​போது, முதல்​வர் தனி விமானத்​தில் செல்​வதற்​குச் செல​விடும் பணத்தை விவ​சாயக் கடன்​களைத் தள்​ளு​படி செய்​ய​வும், நீர்​நிலைகளைத் தூர்​வார​வும்​ பயன்​படுத்​தலாம்​.

மீனவர்களின் பிரச்சினைக்கு  கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
காணாமல் போகும், சிறைபிடிக்கப்படும் மீனவர் குடும்பத்துக்கு தினசரி ரூ.600 உதவித்தொகை: அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in