துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள் 2027 நவம்பருக்குள் நிறைவு: சென்னை துறைமுகத்தின் தலைவர் தகவல்

துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள் 2027 நவம்பருக்குள் நிறைவு: சென்னை துறைமுகத்தின் தலைவர் தகவல்
Updated on
1 min read

சென்னை: துறை​முகம் - மதுர​வாயல் இடையே​யான மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என்​று சென்னை துறை​முகத்​தின் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் துறை​முகத்​தின் தலை​வர் ஜெ.பி.ஐரின் சிந்​தியா ஆகியோர் தெரி​வித்​தனர்.

இது தொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: கடந்த நிதி​யாண்​டில், இரு துறை​முகங்​களும் இணைந்து மொத்​த​மாக 107 மில்​லியன் டன் சரக்​கு​களைக் கையாண்டு புதிய சாதனையை படைத்​துள்​ளன.

இதில் சென்னை துறைமுகம் 57.9 மில்​லியன் டன் சரக்​கு​களை​யும், காம​ராஜர் துறைமுகம் 49.08 மில்​லியன் டன் சரக்​கு​களை​யும் கையாண்​டுள்​ளன. இரு துறை​முகங்​களின் ஒருங்​கிணைந்த செயல்​பாட்டு வரு​வாய் ரூ.2,400 கோடியை கடந்​துள்​ளது. இரு துறை​முகங்​களின் மூலதன செல​வின​மும் ஆயிரம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

இதில் சென்னை துறை​முகம் கடந்த நிதி​யாண்​டில் ரூ.1,185 கோடி செயல்​பாட்டு வரு​வாயை ஈட்​டி​யுள்​ளதுடன், துறை​முக வரலாற்​றிலேயே மிக அதிபட்​ச​மாக ரூ.434.29 கோடி நிகர உபரி வரு​வாயை பதிவு செய்​துள்​ளது.

காம​ராஜர் துறை​முகம் கடந்த நிதி​யாண்​டில் ரூ.1,239 கோடி செயல்​பாட்டு வரு​வாயை ஈட்​டியதுடன், நாட்​டின் முன்​னணி துறை​முகங்​களி​லேயே மிகக் குறைந்த இயக்க சதவீத​மாக 25.48 சதவீதத்தை பதிவு செய்​திருக்​கிறது.

இதே​போல் துறை​முகத்​தின் வட்​டி, வரி மற்​றும் தேய்​மானத்​துக்கு முந்​தைய வரு​வாய் (எபிட்​டா) வரலாற்​றிலேயே முதன்​முறை​யாக ஆயிரம் கோடி ரூபாயை கடந்து ரூ.1,071.63 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

சென்னை துறை​முகத்​துக்கு செல்​லும் கனரக சரக்கு வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக துறை​முகம் - மதுர​வாயல் இடையே அமைக்​கப்​பட்டு வரும் மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் முழு​மை​யாக நிறைவடைய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

காம​ராஜர் துறை​முகத்​தில் பெரிய கப்​பல்​களைக் கையாளுவதற்கு ஏது​வாக ரூ.440 கோடி மதிப்​பில் 6-வது கட்ட ஆழ்​கடல் தூர்​வாரும் பணி​கள் வெற்​றிகர​மாக முடிக்​கப்​பட்​டுள்​ளன.

இதனால் 2.44 லட்​சம் டன் சரக்கு கொள்​ளளவு கொண்ட மிகப்​பெரிய கப்​பல்​களை​யும் தற்​போது கையாள முடிகிறது. இதற்​கிடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்​பீட்​டில் செயல்​படுத்​தப்​பட​வுள்ள சென்னை துறை​முகத்​தின் ‘அவுட்​டர் ஹார்​பர் ப்ராஜெக்ட்’ தொடர்​பாக ‘ரைட்​ஸ்’ நிறு​வனம் போக்​கு​வரத்து ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கிறது.

செங்​கடல் பகு​தி​யில் நில​வும் சர்​வ​தேச பதற்​றங்​கள் மற்​றும் ஈரான்​-அமெரிக்கா இடையே​யான பிரச்​சினை​கள் காரண​மாகக் கச்சா எண்​ணெய் இறக்​கும​தி​யில் தொடக்​கத்​தில் சில சவால்​கள் இருந்​தா​லும், தற்​போது மாற்று வழிகள் மூலம் அவை சீரமைக்​கப்​பட்​டு​விட்​டன.

எனினும் இங்​கிருந்து வளை​குடா நாடு​களுக்கு அனுப்​பப்​படும் வாக​னங்​கள் ஏற்​றும​தி​யில் 6 முதல் 7 லட்​சம் டன் வரை பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதனை எதிர்​கொள்ள ஏற்​றும​தி​யாளர்​களுக்​குக் கூடு​தல் சேமிப்​புக் கிடங்கு வசதி​கள் மற்​றும் கட்​ட​ணச் சலுகைகள் வழங்​கப்​பட்​டு வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள் 2027 நவம்பருக்குள் நிறைவு: சென்னை துறைமுகத்தின் தலைவர் தகவல்
இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in