ஏமாந்து போன ‘முடக்​குக் கலையார்’ கதை | உள்குத்து உளவாளி

ஏமாந்து போன ‘முடக்​குக் கலையார்’ கதை | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘அ​வார்டு நகர்’ மாவட்ட இலைக் கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​கள் சிலர் அண்​மை​யில் பனையூர் கட்​சி​யில் சேர்ந்​தார்​கள். இதில், முன்னாள் ‘சபா’​வாக இருந்த ‘முத்​தான’வரின் தம்பி முக்கியமானவர். இத்​தனைக்​கும் இவர் கிழக்கு மாவட்​டச் செயல் புள்ளியாக இருந்​தவர். கடம்​பூர் தலை​வருடன் கைகோத்து இவர் பனையூருக்​குப் பயணப்​பட்​டது தெரி​யாமல், அதே மாவட்​டத்​தின் இலைக் கட்​சி​யின் முன்​னாள் எம்​எல்​ஏ-க்​கள் இரு​வரும் கூட்​டாக பொதிகை எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் சென்​னைக்கு வந்து அங்​கிருந்து பனையூருக்​குப் புறப்​பட்​டார்​களாம்.

அப்​போது​தான், ‘முத்​தான’வரின் தம்பி அங்கே முன் வரிசை​யில் நிற்​பது தெரிய வந்​திருக்​கிறது. உடனே ‘தாவல்’ புரோகி​ராமை இருவருமே தள்​ளி​வைத்​திருக்​கிறார்​கள். இந்த இரு​வரில் பெயருடன் ‘முடக்​குக் கலை​யை’ சேர்த்து வைத்​திருக்​கும் முன்னாள் எம்​எல்​ஏ-​வானவர், பல கால​மாக மாவட்​டச் செய​லா​ளர் பதவியை குறி​வைத்து காத்​திருந்​தார்.

இந்த நிலை​யில், ‘முத்​தான’வரின் தம்பி முகாம் மாறி​விட்​ட​தால் அந்​தப் பதவியை நமக்கு வாங்​கி​விடலாம் என்ற நம்​பிக்​கை​யில் பனையூர் பயணத்தை அவர் ஒத்​தி​வைத்​தா​ராம். உடன் சென்ற இன்னொரு முன்​னாளுக்​கும் அவருக்​கும் கொடுக்​கல் வாங்​கல் ‘பந்தம்’ இருப்​ப​தால் அவரும் மறுப்​பேதும் சொல்​லாமல் பின்​னால் வந்​து​விட்​டா​ராம்.

அதற்​குள்​ளாக, ‘முடக்​குக் கலை’ முன்​னாள் எம்​எல்​ஏ-​வும் நடிகர் கட்சி​யில் சேர்ந்​து​விட்​ட​தாக செய்​தி​கள் பரவிய​தால், அப்​படியே சென்னை டிரிப்பை சேலத்​துக்கு மாற்​றிய ‘முடக்​குக் கலை’ முக்கியஸ்​தர், அங்கு எடக்​கானவரைச் சந்​தித்​து, “நானெல்​லாம் சினிமா கவர்ச்​சியை நம்பி போகிறவன் இல்​லண்​ணே” என சிலிர்ப்பு வசனம் பேசி​விட்டு திரும்​பி​னா​ராம்.

தொடர்ந்​து, காலி​யான கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் பதவியை பிடிக்க ‘முடக்​குக் கலை’​யார் முஸ்​தீபு காட்ட, “இவங்கள எல்​லாம் நம்ப முடி​யாதுண்​ணே” என்று சொல்லி அந்​தப் பதவிக்கு தனது சார்​பில் 4 பேரை சாய்​ஸாக கொடுத்​தா​ராம் மாவட்​டத்​தின் எகிடு​தகிடு எக்ஸ் மாண்​புமிகு. அதேசம​யம், தேர்​தலில் கூட சீட் கேட்டு வராத, என்​ஜிஓ புகழ் ‘பாண்​டிய​னாரும்’ எடக்​கானவரைச் சந்​தித்து இது விஷய​மாகப் பேசி​னா​ராம்.

ஆனால், இவர்​கள் யார் சொல்​வதை​யும் கேட்​காத எடக்​கானவர், மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட ஆள் தேடிக் கொண்​டிருந்த தனக்கு ஆபத்​பாந்​தவ​னாக கைகொடுத்த திருப்​பதி கடவுள் பெயர் கொண்​ட​வரையே கிழக்கு மாவட்ட பொறுப்​பில் அமர்த்​தி​விட்​டா​ராம். அத்​துடன், ஆறு​தல் பரி​சாக ‘பாண்​டிய​னாருக்​கு’ அமைப்​புச் செயல் பதவியை அள்ளி வழங்கி சமாளித்​தா​ராம். இதனால் இலவு காத்த கிளி​யாக ஏமாந்து போன ‘முடக்​குக் கலை​யார்’ கடந்த 27-ம் தேதி பனையூர் பார்ட்​டி​யில் ஐக்​கிய​மாகி​விட்​டார். இலவச இணைப்​பாக அந்​த இன்​னொரு முன்​னாள்​ எம்​எல்​ஏ-​வும்​ கூடவே சென்​றுவிட்​டா​ராம்.

ஏமாந்து போன ‘முடக்​குக் கலையார்’ கதை | உள்குத்து உளவாளி
தூங்கா நகர் ‘அம்மன்’ கோயில் அறங்காவலர் குழுவினருக்கு அழுத்தம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in