காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Updated on
1 min read

சென்னை: வளசர​வாக்​கம் காவல் நிலைய ஆய்​வாளர்​கள் இரு​வர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை வளசர​வாக்​கத்​தில் அரசு மினி பேருந்​தில் பயணித்த 7-ம் வகுப்பு மாண​வி​யிடம் கடந்த 19-ம் தேதி நடந்​துநர் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வளசர​வாக்​கம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வந்​தனர். இந்​நிலை​யில், குற்​ற​வாளியை கைது செய்​ய​வில்லை எனக் கூறி அனைத்​திந்​திய ஜனநாயக மாதர் சங்​கம், இந்​திய ஜனநாயக வாலிபர் சங்​கம், இந்​திய மாணவர் சங்​கங்​களை சேர்ந்​தவர்​கள் நேற்று முன்​தினம் இரவு காவல் நிலை​யம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

இதன் எதிரொலி​யாக, உரிய நடவடிக்கை எடுக்​காத வளசர​வாக்​கம் மகளிர் காவல் நிலைய ஆய்​வாளர் ஆனந்தி காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டார். இதே​போல், சட்ட விரோத​மாக சூதாட்​டத்​தில் ஈடு​பட்ட 17 பேரை தனிப்​படை போலீ​ஸார் கைது செய்து வளசர​வாக்​கம் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

இந்​நிலை​யில், 3 பேர் மீது மட்​டும் வழக்குப் பதிவு செய்த வளசர​வாக்​கம் சட்​டம் - ஒழுங்கு ஆய்​வாளர் அன்​புக்​கரசனை​யும் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்றி போலீஸ் அதி​காரி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமான கட்டணம் உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in