“இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை” - அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Updated on
1 min read

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்</p></div>
இந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் விற்பனை தொடக்கம்: அதிகாலை முதலே வரிசையில் நின்ற பயனர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in