காசி தமிழ்ச் சங்கமம் குறித்து உணர்ச்சிகரமான கடிதம்: தமிழக மாணவருக்கு மோடி பாராட்டு

காசி தமிழ்ச் சங்கமம் குறித்து உணர்ச்சிகரமான கடிதம்: தமிழக மாணவருக்கு மோடி பாராட்டு
Updated on
1 min read

சென்னை: ​காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அனுபவம் குறித்து உணர்ச்​சிகர​மாக கடிதம் எழு​திய தமிழக மாணவருக்​கு, பிரதமர் மோடி பாராட்​டுத் தெரி​வித்​துள்​ளார்.

திருச்​செங்​கோட்​டைச் சேர்ந்த மாணவர் பிர​காஷ் பழனிவேல், மத்​திய கல்வி அமைச்​சகத்​தால் ஏற்​பாடு செய்​யப்​பட்ட காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார். 2025 நவ. 29 முதல் டிச.7 வரை நடை​பெற்ற நிகழ்​வு​களில் பங்​கேற்ற அவர், தனது அனுபவங்​களை பிரதமருக்கு கடித​மாக எழு​தி​யிருந்​தார்.

அந்த கடிதத்​தில், பழங்​காலத் தமிழ் நாகரி​கத்​தை​யும், காசி​யின் காலத்​தால் அழி​யாத தொன்​மை​யான ஆன்​மிக மரபை​யும் அழகாக இணைத்​து, கருத்து தெரி​வித்​திருந்​தார். மேலும், தொல்​காப்​பி​யம், பார​தி​யாரின் கவிதைகள் ஆகிய​வற்​றில் இருந்​தும் மேற்​கோள் காட்​டி​இருந்​தார்.

காசியை பாரத மாதா​வின் கழுத்து ஆபரண​மாக​வும், தமிழகத்தை வெள்​ளிக் கொலு​சாக​வும் சித்​தரித்து எழு​தி​யிருந்​தார். இரண்​டும் வெவ்​வேறானவை என்​றாலும், ஒரே ஆன்​மிகஉடலின் பிரிக்க முடி​யாத பகு​தி​கள் என்று அவர் குறிப்​பிட்​டிருந்​தார். காசி ஹனு​மான் படித்​துறை​யில், கங்கை நதிக்​கரை​யில் ஒரு

மூதாட்​டி​யுடன் ஏற்​பட்ட அமை​தி​யான சந்​திப்பு குறித்​தும் நெகிழ்​வுடன் குறிப்​பிட்​டிருந்​தார். மொழி புரி​யா​விட்​டாலும், தீபம், புன்​னகை, பிரார்த்​தனை மூலம் ஆழமான ஒற்​றுமை உணர்வு ஏற்​பட்​ட​தாக​வும் குறிப்​பிட்​டிருந்​தார்.

பக்தி என்​பது மொழிக்கு அப்​பாற்​பட்​டது என்​றும், வட இந்​தி​யா​வுக்​கும், தென்​னிந்​தி​யா​வுக்​கும் இடையி​லான ஆழமான பிணைப்​பை இந்​நிகழ்வு பிர​திபலிப்​ப​தாக​வும் அந்த மாணவர் விவரித்​திருந்​தார். அந்​தக் கடிதத்​துக்​குப் பதில் அளித்​துள்ள பிரதமர் நரேந்​திர மோடி, மாணவரின் பயணம் குறித்​தும், காசி​யில் அவருக்கு ஏற்​பட்ட அனுபவங்​கள் குறித்​தும் மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார். மாணவர் பிர​காஷ் இயற்​றிய கவிதை ஆழமாக நெஞ்​சைத் தொடு​கிறது என்​றும் பாராட்​டி​உள்​ளார்.

காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்​வு, தமிழ் மொழி, தமிழகத்​தின் செழு​மை​யான கலாச்​சா​ரம், காசி​யுட​னான அதன் வரலாற்​றுத் தொடர்பு ஆகிய​வற்​றைக் கொண்​டாடும் துடிப்​பான தளமாக மாறி​யுள்​ளது என்​றும் பிரதமர் குறிப்​பிட்​டுள்​ளார்.

இத்​தகைய பங்​கேற்​பின் மூலம், பிர​காஷ் பழனிவேல் போன்ற மாணவர்​கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உயர்த்​திப் பிடிப்​பவர்​களாக மாறி​யுள்​ளனர் என்று தெரி​வித்​துள்ள பிரதமர், காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்​வில் இளைஞர்​களின் உற்​சாக​மான பங்​கேற்​பைப் பாராட்​டி​யுள்​ளார்.

காசி தமிழ்ச் சங்​கமம் மீதான மாணவரின் பற்​றுக்​கும், ஆதர​வுக்​கும் நன்றி தெரி​வித்​துள்ள பிரதமர் மோடி, இது​போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகள், நாடு முழு​வதும் கலாச்​சா​ரப் பிணைப்​பு​களை மேலும் வலுப்​படுத்​தத் தன்னை ஊக்​கு​விப்​ப​தாக நெகிழ்ச்​சி​யுடன்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in