பாஜகவுக்கு 2029 தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்

பாஜகவுக்கு 2029 தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்
Updated on
1 min read

சென்னை: பாஜகவுக்கு 2029 பொதுத்​தேர்​தலில் மக்​கள் சரி​யான பதிலடி கொடுப்​பார்​கள் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக காங்​கிரஸ் சார்​பில் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்​த​நாளை மாநில அளவில் மிகச் சிறப்​பாகக் கொண்​டாட சிறப்பு விழாக்​குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. தமி​ழ​கத்​தின் 77 மாவட்ட காங்​கிரஸ் சார்​பிலும் விழாக்​குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, 10,000-க்​கும் மேற்​பட்ட பள்ளி மாண​வ-​மாணவி​கள் பங்​கேற்​கும் பேச்​சுப்​போட்​டிகள் அடுத்த 20 முதல் 25 நாட்​களுக்​குப் பல்​வேறு இடங்​களில் நடத்​தப்பட உள்​ளன.

இப்​போட்​டி​களின் இறு​திச்​சுற்​று, அக்​டோபர் 1-ம் தேதி சிவாஜி கணேசன் பிறந்த நாளன்று சென்​னை​யில் நடை​பெறும். இதில் வெற்​றி​பெறும் மாண​வர்​களுக்கு பரிசு வழங்​கப்​படும்.

பள்​ளி​களுக்​குள் அரசி​யல் சார்ந்த நிகழ்ச்​சிகளை நடத்​தக் கூடாது என்​ப​தால், இப்​போட்​டிகள் அனைத்​தும் பள்ளி வளாகங்​களுக்கு வெளியே உள்ள மண்​டபங்​கள் மற்​றும் பொது இடங்​களில் நடத்​தப்​படும். 2027-ல் வரவிருக்​கும் சிவாஜி கணேசன் நூற்​றாண்டு விழாவுக்கு இது ஒரு முன்​னோட்​ட​மாக அமை​யும்.

தமி​ழ​கத்​தில் கடந்த காலங்​களில் நில​விய கமிஷன் கலாச்​சா​ரம் குறைந்​து, லஞ்​சமற்ற நேர்​மை​யான ஆட்​சிக்​கான முயற்​சிகள் நடக்​கின்​றன. காம​ராஜர் ஆட்​சிக்​குப் பிறகு, இத்​தகைய நேர்​மை​யான சூழலுக்கு அரசு அதி​காரி​களும் அமைச்​சர்​களும் தங்​களை உட்​படுத்​திச் செயல்​படு​வது வரவேற்​கத்​தக்​கது.

எங்​கள் கூட்​ட​ணி​யானது மதச்​சார்​பின்​மை, சமூக நீதி ஆகிய இரு முக்​கியக் கொள்​கைத் தூண்​களின் மீது கட்​டமைக்​கப்​பட்​டுள்​ளது. கூட்​ட​ணி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்​தச் சிலர் முயல்​வது ‘நரித்​தந்​திரம்’ ஆகும்.

பாஜக அரசு எதிர்க்​கட்​சிகளை உடைத்து ஆட்சி அமைத்​தா​லும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக ராகுல் காந்தி மக்​கள் பிரச்​சினை​களுக்​காக தொடர்ந்து குரல் கொடுத்து வரு​கி​றார். பாஜக​வின் இத்தகைய நடவடிக்​கை​களுக்கு 2029 பொதுத்​தேர்​தலில் மக்​கள் சரி​யான பதிலடி கொடுப்​பார்​கள்.

தமிழக சட்​டப்​பேரவை நிகழ்​வு​கள் முழு​மை​யாக நேரலை செய்​யப்​படு​வது ஜனநாயகப் பண்பை உயர்த்​துகிறது. எதிர்க்​கட்​சி​களின் கேள்வி​களை​யும், அதற்கு அமைச்​சர்​கள் அளிக்​கும் தெளி​வான விளக்​கங்​களை​யும் பொது​மக்​கள் நேரடி​யாக அறிந்​து​கொள்ள இது உதவு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதே​போல் அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “குஜ​ராத்​தில் யாருக்​கும் தெரி​யாத பெயர்​களைக் கொண்ட சில கட்​சிகள், தேர்​தலில் அரி​தாகவே போட்​டி​யிட்​ட​வை.

ஆனால் அவற்​றுக்கு கிடைத்த நன்​கொடை மட்​டும் ரூ.4,300 கோடி. இந்​தப் பணம் எங்​கிருந்து வந்​தது? யார் இந்​தக் கட்​சிகளை நடத்​துகி​றார்​கள்? தேர்​தலில் பெரி​தாக செயல்​ப​டாத இந்த அமைப்​பு​களுக்கு ஏன் ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் நன்​கொடை வழங்​கப்​பட்​டது? அந்​தப் பணம் இறு​தி​யில் எங்கே சென்​றது? முறை​யான அலு​வல​கம் கூட இல்​லாத அமைப்​பு​களுக்கு கோடிக்​கணக்​கில் நன்​கொடைகள் கிடைப்​பது எப்​படி? இது ஜனநாயகத்​தின் வெளிப்​படைத்​தன்மை குறித்த மிகப்​பெரிய கேள்​வி. தேர்​தல் ஆணை​யம் இதை முழு​மை​யாக விசா​ரிக்​கு​மா?” எனத் தெரி​வித்​துள்​ளார்.

பாஜகவுக்கு 2029 தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்
பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை: மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in