ஓய்வூதியக் குழு அறிக்கை: அமைச்சர்கள் ஆலோசனை

ஓய்வூதியக் குழு அறிக்கை: அமைச்சர்கள் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: ஓய்​வூ​தி​யக் குழு​வின் இடைக்​கால அறிக்கை தொடர்பாக அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, அன்​பில் மகேஸ் ஆகியோர் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர்.

பழைய ஓய்​வூ​தி​யம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யம், ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யம் ஆகிய 3 வித​மான ஓய்​வூ​தி​யத் திட்​டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு கடந்த பிப்​ர​வரி​யில் ஒரு குழு அமைத்​தது.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​களை சந்​தித்து அவர்​களது கருத்​துகள், ஆலோ​சனை​களைப் பெற்ற இந்த குழு, கடந்த செப்​.30-ம் தேதி இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்பித்​தது. இறுதி அறிக்​கையை டிசம்​பர் இறு​திக்​குள் சமர்ப்பிக்க குழு​வுக்கு கூடு​தல் அவகாசம் தரப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, அரசு ஊழியர் - ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ, திமுக​வின் பிர​தான தேர்தல் வாக்குறு​தி​யான பழைய ஓய்​வூ​தி​யத் திட்ட கோரிக்​கையை நிறைவேற்​றக் கோரி ஜன.6 முதல் கால​வரையற்ற வேலை நிறுத்தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக அறி​வித்​துள்​ளது.

இந்தச் சூழலில், ககன்​தீப் சிங் பேடி குழு​வின் இடைக்​கால அறிக்கை பரிந்​துரைகள் தொடர்பாக அமைச்​சர்​கள் எ.வ.வேலு தங்​கம் தென்​னரசு, அன்​பில் மகேஸ் ஆகியோர் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். இதில் பல சில முடிவுகள் எடுக்​கப்பட்​ட​தாக தெரி​கிறது. எனவே, ஓய்​வூ​திய திட்​டம் தொடர்​பாக விரை​வில் முக்​கிய அறி​விப்பு வெளி​யாகலாம் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

ஓய்வூதியக் குழு அறிக்கை: அமைச்சர்கள் ஆலோசனை
100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: மத்திய அரசின் முயற்சிக்கு பழனிசாமி வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in