எஸ்ஐஆர் பணியில் ஆளுங்கட்சி குறுக்கீடு: பழனிசாமி குற்றச்சாட்டு

எஸ்ஐஆர் பணியில் ஆளுங்கட்சி குறுக்கீடு: பழனிசாமி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சேலம்: சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தம் (எஸ்​ஐஆர்) பணி​யில் ஆளுங்​கட்சி குறுக்​கீடு உள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக அரசு மெத்​தனம் காட்டி வரு​கிறது.

இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள திமுக, தங்​களது கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி, இந்​தப் பிரச்​சினைக்கு சுமுகத் தீர்​வு​காண வேண்​டும். கோவை​யில் மெட்ரோ ரயில் நிலை​யம் அமைப்​பது தொடர்​பான தமிழக அரசின் அறிக்​கையை மத்​திய அரசு திருப்பி அனுப்​பிய​தாக கூறப்​படு​கிறது.

நகர்ப் பகு​தி​களில் மெட்ரோ ரயில் அமைக்க 20 லட்​சம் மக்​கள்​தொகை இருக்க வேண்​டும் என்​பது அரசின் விதி. 2011-ல் அதி​முக ஆட்​சி​யின்​போது மெட்ரோ ரயில் திட்​டத்​துக்கு விரி​வான அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டது. அப்​போது 15 லட்​சம் பேர்​தான் இருந்​தார்​கள்.

எனவே, 2025-ம் ஆண்டு மக்​கள்​தொகை விவரங்​களை அறிக்​கை​யாகத் தயாரித்து மத்​திய அரசிடம் சமர்ப்​பிக்க வேண்​டும். மாநில அரசின் தவறான அணுகு​முறை​யால் இந்​தப் பணி​யில் சுணக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. தமிழக சட்​டம்​-ஒழுங்கு காவல் பிரிவுக்கு நிரந்தர டிஜிபி இன்​னும் நியமிக்​கப்​பட​வில்​லை. தங்​களுக்கு வேண்​டிய​வர்​களை நியமிப்​ப​தால், உயரதி​காரி​கள் முறை​யாகச் செயல்​படு​வ​தில்​லை.

இதனால் குற்​றங்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. குற்​றச் சம்​பவங்​களில் முறை​யாக துப்பு துலக்​காத​தால் சிபிஐ விசா​ரணை வேண்​டும் என்று பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நீதி​மன்​றம் சென்​றாலும், உச்ச நீதி​மன்​றம் வரை சென்று சிபிஐ விசா​ரணை கூடாது என்று அரசு மேல்​முறை​யீடு செய்​வது ஏன்? குற்​றச் சம்​பவங்​களின் பின்​னணி​யில் முக்​கியப் புள்​ளி​கள் இருப்​ப​தாக கருதுகிறேன்.

எஸ்​ஐஆர் பணி மூலம் இரட்டை வாக்​காளர்​கள், இறந்​தவர்​கள் மற்​றும் இடமாற்​றம் செய்த வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​படும். தாம்​பரம் தொகு​தி​யில் ஒரு பாகத்​தில் ஒரே கதவு எண்​ணில் 320 வாக்​கு​களும், மற்​றொரு பாகத்​தில் ஒரு கதவு எண்​ணில் 180 வாக்​கு​களும் உள்​ள​தாக வாக்​காளர் பட்​டியலில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எஸ்​ஐஆர் பணி​யில் ஆளுங்​கட்​சி​யினரின் தலை​யீடு உள்​ளது.

சென்னை மாநக​ராட்சி ஆணை​யரே ஆளுங்​கட்​சி​யினருக்கு உடந்​தை​யாக இருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. எஸ்​ஐஆர் பணி​யில் அதி​காரி​களை சுதந்​திர​மாக செயல்பட வைத்​தால் மட்​டுமே இந்​தப் பணி​கள் முடிவடை​யும். இவ்​வாறு பழனி​சாமி கூறி​னார்.

தேர்தல் ஆணையத்தில் மனு: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்பதுரை எம்.பி. ஆகியோர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “தமிழகத்தில் விதிகளுக்கு உட்பட்டு எஸ்ஐஆர் பணிகளை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in