அண்ணா பல்கலை. மாணவர் உயிரிழப்பு எதிரொலி: கல்லூரிகள், பல்கலை.களை தூய்மையாக வைத்திருக்க உத்தரவு

உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

Updated on
1 min read

சென்னை: டெங்கு காய்ச்​சலில் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் உயி​ரிழந்த சம்​பவத்தை தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் அனைத்து கல்​லூரி​கள், மற்​றும்பல்​கலைக்​கழகங்​களை தூய்​மை​யாக வைத்​திருக்க உத்​தர​விடப்​பட்​டிருப்​ப​தாக உயர்​கல்வி அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் தெரி​வித்​தார்.

கொரிய குடியரசின் கல்வி அமைச்​சகம், சர்​வ​தேச கல்விக்​கான தேசிய நிறு​வனம், சென்​னை​யில் உள்ள கொரிய துணை தூதரகம் சார்​பில் ‘ஸ்​டடிஇன் கொரி​யா’ உயர்​கல்வி கண்​காட்சி ராஜா அண்​ணா​மலை புரம் லீலா பேலஸ் ஹோட்​டலில் நேற்று நடந்​தது. 12 கொரிய பல்​கலைக்​கழகங்​கள் பங்​கேற்ற இந்த கல்வி கண்​காட்​சியை தமிழக உயர்​கல்வி அமைச்​சர் விஸ்​வ​நாதன் தொடங்கி வைத்தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அண்ணா பல்​கலைக்​கழக மாணவரின் மரண அறிக்​கை​யில் உண்ணி காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்​தார் என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. டெங்​கு, மலேரி​யா, ப்ளூ காய்ச்​சல் எது​வாக இருந்​தா​லும் பல்​கலைக்​கழகங்​கள் பாது​காப்​பாக, சுகா​தா​ர​மாக இருக்க வேண்​டும். அண்ணா பல்​கலைக்​கழக வளாகத்​தில் ஒட்​டுமொத்​த​மாக சுத்​தப்​படுத்​தும் பணியை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும், மாணவர்​களுக்கு உடனடி​யாகமருத்​துவ முகாம் நடத்த வேண்​டும் என்​றும் பதி​வாள​ருக்கு அறி​வுரை வழங்​கினேன்.

அதன் பேரில் பல்​கலைக்​கழகவளாகத்​தில் தூய்மை முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. பாதிப்பை தவிர்க்க, தமிழகம் முழு​வதும் கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள் அனைத்​தும் தூய்மை நிறைந்த வளாக​மாக இருக்க வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளேன். அனைத்து மாணவர்​களை​யும் அரசு பாது​காக்​கும்.

தனி​யார் பல்​கலை. மசோதா தனி​யார் பல்​கலைக்​கழக மசோதா ஆளுந​ரால் குடியரசு தலை​வருக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. இது முக்​கிய​மான மசோ​தா​வாக பார்க்​கப்​படு​கிறது. திமுக அரசு கடந்த 2025-ல் கொண்​டு​வந்த தனி​யார் பல்​கலைக்​கழக மசோதா வாபஸ் பெறப்​பட்​டது. ஏற்​கெனவே உள்ள கல்வி நிறு​வ

னத்தை ஒரு பல்​கலைக்​கழக​மாக மாற்ற வகைசெய்​யும் மசோ​தா​தான் திமுக அரசின் மசோ​தா. நாங்​கள் இப்​போது கொண்​டு​வந்​திருப்​பது புதிய தனி​யார் பல்​கலைக்​கழகம் அமைக்க வகை செய்​யும் மசோதா ஆகும். அனைத்து அடிப்​படை உள்​கட்​டமைப்பு வசதி​களு​டன் உலக தரத்​தில் பல்​கலைக்​கழகம் அமைக்​கப்பட வேண்​டும் என்​ப​தற்​காக இந்த மசோ​தாவை கொண்​டு​வந்​துள்​ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.</p></div>
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in