நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் பெயர் பட்டியலை அளிக்க உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் பெயர் பட்டியலை அளிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: ​கொடைக்​கானலில் பட்டா நிலத்​தில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​வ​தில் நீதி​மன்​றத்​தின் உத்​தரவை நிறைவேற்ற விடா​மல் தடுத்த வழக்​கறிஞர்​களின் பட்​டியலை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்டது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஹபீப் ரகு​மான், உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: கொடைக்​கானல் சீனி​வாசபுரத்​தில் எனக்கு சொந்​த​மான பட்டா நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இருப்​பினும் தொடர்ந்து நடந்துவரும் கட்​டு​மானங்​களை நிறுத்​த​வும், ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. நகராட்சி ஆணை​யர் தரப்​பில், மனு​தா​ரர் நிலத்​தில் உள்ள அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​டு​மானங்​களை அகற்ற நடவடிக்கை எடுத்த அதி​காரி​களை வழக்கறிஞர்கள் சிலர் தடுத்​தனர் எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், யாரும் சட்​டத்தை கையில் எடுக்​கக் கூடாது. நீதி​மன்ற உத்​தரவு நிறைவேற்​றப்​படு​வதை தடுத்த வழக்​கறிஞர்​களின் பெயர்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை ஏப். 28-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றனர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் பெயர் பட்டியலை அளிக்க உத்தரவு
பேரவைத் தேர்தல் 2026: ஏன் வாக்களிக்க வேண்டும்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in