தமிழகத்தில் மனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு

முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் மனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு
Updated on
1 min read

சென்னை: தமி​ழ​கத்​தில் மனை, அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வீடு​களுக்கான முதல் விற்​பனை பதிவுக்கு இணையவழி​யில் வரு​கை​யில்லா ஆவணப்பதிவு கட்​டா​யமாக்​கல் நடை​முறையை முதல்​வர் விஜய் நேற்று தொடங்கி வைத்​தார்.

பதிவு நடை​முறை​யில் வெளிப்​படைத்​தன்மை மற்​றும் செயல்​திறனை மேலும் மேம்​படுத்​த​வும், பொது​மக்​களுக்கு எளி​தான சேவையை வழங்​க​வும் நேரில் வரு​கையற்ற பதிவு முறை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள், சார்​ப​தி​வாளர் அலு​வல​கம் வரா​மலேயே மனை அல்​லது அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் உள்ள வீட்​டின் முதல் விற்​பனையை தற்​போது பதிவு செய்​ய​லாம். இப்​பு​திய முறை​யில் பதிவுத்​துறை இணை​யதளத்​தில் தங்​களது உள்​நுழை​வினைத் தாங்​களே உரு​வாக்கி ஆவணங்​களை இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கலாம்.

அதன்​பின் ஆவணத்தை எழு​திக் கொடுப்​பவர்​கள், எழு​திப் பெறு​பவர்​கள் மற்​றும் சாட்​சி​களின் ஆதார் அட்டை பதிவேற்​றப்பட வேண்​டும். ஆதார் ஆணை​யத்​தின் மூலம் கைரேகை அல்​லது கரு​விழிப் படலம் வழி ஆதார் சரி​பார்க்​கப்பட வேண்​டும்.

இதற்​கு, இணைய இணைப்​பு, ஆதார் ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட எல்1 விரல் ரேகை இயந்​திரம் மற்​றும் கரு​விழிப்​படலம் ஸ்கேன் செய்​யும் கரு​வி, புகைப்​படம் எடுக்க, எடுப்​பவரின் பின்​புறத்​தில் வைக்க தேவைப்​படும் நீலத்​திரை, புகைப்​படக் கருவி ஆகிய தொழில்​நுட்ப உபகரணங்​கள் தேவைப்​படும்.

வரு​கை​யில்லா ஆவணப்​ப​தி​வின் மூலம் இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஆவணங்​களை சார்​ப​தி​வாளர்​கள் 24 மணி நேரத்​துக்​குள் பதிவு செய்தோ அல்​லது திருத்​தத்​துக்​காக திருப்பி அனுப்​பியோ அல்​லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

வரு​கை​யில்லா ஆவணப்​ப​தி​வின் மூலம் இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஆவணங்​கள் சார்​ப​தி​வாளர்​களால் தற்​போதுள்ள நடை​முறை​யில் உள்​ளபடி சரி​பார்க்​கப்​பட்​டு, சட்ட விதி​களுக்​குட்​பட்டு பதிவு செய்​யப்​படும்.

திருத்​தத்​துக்​காகத் திருப்பி அனுப்​பப்​படும் ஆவணங்​களை திருப்பி அனுப்​பப்​பட்ட நாளி​லிருந்து 30 நாட்​களுக்​குள் தேவை​யான திருத்​தங்​களு​டன் மீண்​டும் சமர்ப்​பிக்​கலாம்.

பதிவு செய்​யப்​பட்ட ஆவணங்​களில் சார்​ப​தி​வாளர் டிஜிட்​டல் கையொப்​பமிட்​டு, ஆவணப்பதிவுக்​காக உரு​வாக்​கப்​பட்டபயனர் உள்​நுழை​வில் அவை கிடைக்​கச் செய்​யப்​படும்.

பயனர் உள்​நுழை​வில் கிடைக்​கும் பதிவு செய்​யப்​பட்ட ஆவணத்தை 60 நாள்​களுக்​குள் தேவை​யான எண்​ணிக்​கை​யில் பதி​விறக்​கம் செய்​யும் வகை​யில் மென் பொருள் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. 60 நாள் முடிந்த பின், பொது​மக்​கள் நடை​முறை​யில் உள்ள முறை​யின்​படி சான்​றிட்ட நகலுக்கு விண்​ணப்​பித்து பதிவு செய்​யப்​பட்ட ஆவணத்​தைப் பெறலாம்.

மக்​கள் நலனுக்​காக​வும், பதிவு நடை​முறையை எளிமைப்​படுத்​தி, வெளிப்​படைத்​தன்​மையோடு செயல்​படுத்​திடும் வகை​யிலும் மனை மற்​றும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு வீட்​டுக்​கான முதல் விற்​பனை ஆவணத்தை பதிவுத்​துறை​ யில் வரு​கை​யில்லா ஆவணப்​ப​திவு முறை​யின்​கீழ் பதிவு செய்​வது கட்​டாய​மாக்​கப்​படு​கிறது.

இந்த புதிய வசதியை முதல்​வர் விஜய் நேற்று தலை​மைச்​செயல​கத்​தில் தொடங்கி வைத்​தார். நிகழ்​வில், அமைச்​சர் த. லோகேஷ் தமிழ்​செல்​வன், துறை செயலர்​ ஜெ.குமரகுருபரன், பதிவுத்​துறைத்​ தலை​வர்​.ஜி.கே.அருண்​ சுந்​தர்​ தயாளன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்றனர்.

தமிழகத்தில் மனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in