தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு

தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

நாகர்கோவில்: தக்​கலை அருகே கட்​டுப்​பாட்டை இழந்து தாறு​மாறாக ஓடிய ஆம்னி பேருந்து, ஆற்​றில் பாய்ந்​தது. மோட்​டார் சைக்​கிள் மீது மோதியதில் இரு​வர் உயி​ரிழந்​தனர்.

பெங்​களூரு​வில் இருந்து நாகர்​கோ​வில் வழி​யாக கேரள மாநிலம் கொல்​லத்​துக்கு சென்ற தனி​யார் ஆம்னி பேருந்​து, நேற்று அதி​காலை நாகர்​கோ​வில் வந்​தது அங்கு பயணி​களை இறக்​கி​விட்ட பின்​னர், திரு​வனந்​த​புரத்​துக்கு 28 பயணிகளு​டன் புறப்​பட்​டது.

தக்​கலை அருகே குமாரகோ​வில் பகு​தி​யில் செல்​லும்​போது திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த தாறு​மாறாக ஓடி, எதிரே வந்த பைக் மீது மோதி​யது. அதன் பிறகும் நிற்​காமல் அப்​பகு​தி​யில் உள்ள ஆற்​றுக்​குள் பாய்ந்​தது.

இந்த விபத்​தில் பைக்​கில் வந்த சிதறால் பகு​தி​யைச் சேர்ந்த விஜய் (28), புதுக்​கடை அருகே பைங்​குளத்​தைச் சேர்ந்த சுரேஷ் (41) ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

ஆற்​றுக்​குள் விழுந்த பேருந்​தில் இருந்த பயணி​கள் வெளியே வரமுடி​யாமல் அபயக்​குரல் எழுப்​பினர். அக்​கம்​பக்​கத்​தினர் அங்கு சென்று பயணி​களை மீட்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர்.

தக்​கலை தீயணைப்பு நிலை​யத்​தினரும் விரைந்து வந்​து, பேருந்​தின் பின்பக்க அவசரக் கதவை உடைத்து பயணி​களை மீட்​டனர். ஓட்​டுநர் உட்பட 28 பயணி​கள் லேசான காயங்​களு​டன் உயிர் தப்​பினர்.

அவர்​கள் தக்​கலை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். விபத்​தில் உயி​ரிழந்த விஜய்​யின் மனைவி கர்ப்​ப​மாக உள்​ளார். சுரேஷுக்கு மனைவி மற்​றும் 5 வயதில் மகன் உள்​ளனர்.

தகவலறிந்த மாவட்ட ஆட்​சி​யர் அழகுமீ​னா, எஸ்​.பி. ஸ்டா​லின் ஆகியோர் சம்பவ இடத்​துக்கு சென்று மீட்பு பணி​களை பார்​வை​யிட்​டனர். இதுதொடர்​பாக, தக்​கலை போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு
ஆண்டிபட்டி தொகுதியில் வெள்ளிமலை வனக்கிராமத்தில் வசிக்கும் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in