

விஜய் பிரதமராக வேண்டும் என்பதில் சர்ச்சை இல்லை: நிர்மல் குமார் கருத்து
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் 311-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் நினைவு மாளிகையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், வி.கே.ராஜீவ் மரியாதை செலுத்தினர்.
பின்னர், அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் எந்த சர்ச்சையும் இல்லை. தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான். இயற்கை ஒரு விஷயத்தை தானாகவே உருவாக்கும். இதை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியில் எந்த முரணும் இல்லை. மின் உற்பத்தி திட்டங்களில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்.
தென்காசி நெல்கட்டும்செவலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலை யோடு செயல்படுவது பாராட்டுக்குரியது. பேரவையில் ரீல்ஸ்களுக்காக சில விஷயங்கள் நடைபெறுகின்றன. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக முதல்வராகவிஜய் தொடர வேண்டும்.
ஊழலற்ற ஆட்சியை அவர் தொடர்ந்து வழங்க காங்கிரஸ் துணை நிற்கும். விஜய், ராகுல் காந்திக்கு இடையேயான உறவு சகோதரத்துவத்துடன் பலமாக உள்ளது. நாங்கள் பாஜகவுக்கு எப்போதும் எதிரானவர்கள். நம்பி வந்தவர்களுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். இவ்வாறு அவர் கூறினார்.