கடற்கரையில் குப்பை வீசுவோருக்கு அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கடற்கரையில் குப்பை வீசுவோருக்கு அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடற்​கரைகளில் மக்​கள் அதி​கம் கூடும் நாட்​கள், விழாக் காலங்​களில் பொறுப்​பின்றி குப்​பையை வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்​டும் என்று உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஒவ்​வொரு ஆண்​டும் காணும் பொங்​கலுக்கு அடுத்த நாள், சென்​னை​யில் மெரினா மற்​றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரைகளில் குப்பை அதிக அளவில் கிடப்​ப​தாக இணைய இதழ் ஒன்​றில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்தி வெளி​யானது. அதன் அடிப்​படை​யில், தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்​வந்து வழக்​காக பதிவு செய்து விசா​ரித்து வந்​தது.

இந்​நிலை​யில், அமர்​வின் நீதித் துறை உறுப்​பினர் நீதிபதி புஷ்பா சத்ய​நா​ராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் பிர​சாந்த் கார்​கவா ஆகியோர் வழங்​கி​யுள்ள தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடற்​கரை மண்​டலங்​கள், கடற்​கரைப் பகு​தி​கள், ஆறுகள், நீர்​நிலைகளை ஒட்​டிய பகு​தி​களில் திடக்​கழிவு மேலாண்மை விதி​கள்​-2026ஐ ஊரக வளர்ச்​சித் துறை மற்​றும் நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் கட்​டா​யம் கடைபிடிக்க வேண்​டும்.

அதிக எண்​ணிக்​கை​யில் மக்​கள் கூடும் நிகழ்​வு​களுக்​கு, எதிர்​பார்க்​கப்​படும் கூட்​டத்​துக்கு ஏற்ப போது​மான பணி​யாளர்​கள், கழிவு சேகரிப்பு முறை​கள், விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் ஆகிய​வற்றை உள்​ளாட்சி அமைப்​பு​கள் உறு​தி​செய்​து, நிகழ்​வுக்கு முன்​ன​தாகவே ஒரு ‘சுற்​றுச்​சூழல் மேலாண்​மைத் திட்​டத்​தை’ (Pre-Event Environmental Management Plan) தயாரித்து செயல்​படுத்த வேண்​டும்.

பொறுப்​பின்றி குப்​பையை வெளியே வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்​டும். கடற்​கரை சூழலியலைப் பாது​காக்க, குறிப்​பாக கடல் ஆமை​கள் முட்​டை​யிடும் கால​மான ஜனவரி முதல் மே மாதம் வரை, அவை முட்​டை​யிடும் பகு​தி​களை அடை​யாளம் கண்​டு, பாது​காப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

விழாக் காலங்​கள் மற்​றும் மக்​கள் அதி​கம் கூடும் காலங்​களில், கடலோரப் பகு​தி​களில் திடக்​கழிவு மேலாண்மை விதி​கள்​-2026ஐ கட்​டா​யம் கடைபிடிக்க அனைத்து நகர்ப்​புற உள்​ளாட்​சிகளுக்​கும் நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை உத்​தர​விட வேண்​டும். அந்த விதி​கள் முறை​யாக கடைபிடிக்​கப்​படு​கிறதா என்று கண்​காணிக்க வேண்​டும். மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் நடை​பாதை கடைகள், ஆக்​கிரமிப்பு கடைகளை உள்​ளாட்சி அமைப்​பு​கள் ஒழுங்​குபடுத்த வேண்​டும்.இவ்​வாறு தீர்ப்​பில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

கடற்கரையில் குப்பை வீசுவோருக்கு அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
லெபனான் மீது வான்வழி தாக்குதல்: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in