கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்குக் கொடுக்க அரசுக்கு உரிமை இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்குக் கொடுக்க அரசுக்கு உரிமை இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 50 நாட்​களில் மட்​டும் 153 பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​களும், 75 படு​கொலைகளும் நடந்​துள்​ளன.

தமிழகத்தை போதைப் ​பொருட்​களில் இருந்து மீட்​க​வும், சட்​டம் ஒழுங்​கைப் பாது​காக்​க​வும் முதல்​வர் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இனாம் சொத்​துகள் தொடர்​பாக 1947-ல் தொடரப்​பட்ட வழக்​கில், 1968-ம் ஆண்டு உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பின்​படி, இனாம் சொத்​துகள் கோயில்​களில் பணிபுரிபவர்​களுக்​கும், சேவை செய்​பவர்​களுக்​கும் மட்​டுமே உரியது.

ரயத்​து​வாரி பட்டா கொடுத்​திருந்​தா​லும், அதை வேறு யாருக்​கும் மாற்​ற சட்​டத்​தில் இடமில்லை. 50 ஆண்​டு​களுக்கு மேலாக குடி​யிருப்​பவர்​களுக்கு உரிமை கொடுப்​ப​து தவறில்​லை, அதே​நேரம், கோயிலுக்​கான வரி வரு​வாய் பாதிக்​கப்​படக்​கூ​டாது.

எனவே, அந்த நிலங்​களுக்​குப்பட்டா கோருவதற்கோ அல்​லது உரிமை கொண்​டாடு​வதற்கோ யாருக்​கும் அதிகாரம் இல்​லை. பழநி மலை அடி​வாரத்​தில் சுமார் ரூ.100 கோடி மதிப்​புள்ள 1 ஏக்​கர் 44 சென்ட் கோயில் நிலத்​தை, ஜூலை 6-ம் தேதி முறை​கே​டாக தனி​யார் பெயரில் பட்டா போட்டு கொடுத்​துள்​ளனர்.

அந்த குறிப்​பிட்ட சார்​-ப​தி​வாளர் விடு​முறை​யில் சென்​றதும், அவருக்​குப் பதிலாக வேறொரு​வர் வந்து நிலத்​தைப் பதிவு செய்​ததும் பல சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது.

அந்த சார்​-ப​தி​வாளர் ஏன் திடீரென விடு​முறை​யில் சென்​றார் என்​ப​தை அறநிலை​யத்​துறை அமைச்​சர் விளக்​க வேண்டும் கோயில் இடங்களைத் தனி​யாருக்​குக்கொடுக்க அரசுக்கு எந்த உரிமை​யும் இல்லை என பல்​வேறு நீதி​மன்​றத் தீர்ப்​பு​கள் உள்​ளன என்றார்.

கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்குக் கொடுக்க அரசுக்கு உரிமை இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in