பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: ​திமுக அரசு பல்​கலைக்​கழகங்​களை திவாலாக்​கு​கிறது என பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவு: ஓய்​வூ​தி​யம் வழங்க போதிய நிதி​யில்​லாத​தால், கார்​பஸ் ஃபண்ட்​டில் இருந்து ரூ.95 கோடியை சென்னை பல்​கலைக்​கழகம் வழங்​கி​யுள்​ள​தாக வெளிவந்​துள்ள தகவல் அதிர்ச்​சியளிக்​கிறது.

பெருமை வாய்ந்த சென்​னைப் பல்​கலைக்​கழகம் நிதி​ இல்​லாமல் முடங்​கி​யிருக்​கிறது. இந்​நிலை​யில், அவசர​கால நெருக்​கடியைச் சமாளிக்​க​வும், நிதி நிலையை வலுப்​படுத்​த​வும் ஒதுக்​கப்​பட்​டுள்ள கார்​பஸ் ஃபண்​டின் வட்​டியைப் பயன் படுத்தி ஓய்​வூ​தி​யம் வழங்​காமல், மூலதனத்​தையே செலவழித்து ஓய்​வூ​தி​யம் வழங்​கி​யுள்​ளது.

அதனிடம் அடிப்​படை செல​வு​களுக்​குக்​கூட வேறு எந்த நிதி​யுமே இல்லை என்​பது தெளிவாகிறது. மேலும் காம​ராஜர் பல்​கலைக்​கழகம், அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழகம் உட்பட பல்வேறு உயர்​கல்வி நிலை​யங்​களில் சம்பள, ஓய்​வூ​திய பாக்​கிக்​காக பேராசிரியர்​கள் போராடு​வதும், பணம் இல்லை என்று பல்​கலைக்​கழகங்​கள் கைவிரிப்​பதும் தொடர்​கிறது.

உயர்​கல்வி நிலை​யங்களின் அடிப்​படைச் செயல்​பாட்​டுக்​குத் தேவை​யான நிதி​யைக்​கூட அளிக்​காமல், பல கோடி செல​வளித்து "கல்​வி​யில் சிறந்த தமிழ்​நாடு" என்று விளம்பர விழாக்​களை திமுக அரசு நடத்தி வரு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் கோலாகலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in