

தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை தட்டிக் கேட்கும் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக தங்களது கட்சியை பலப்படுத்திக் கொள்வதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்து கொண்டு வரப்பட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் எடுத்த முயற்சி காரணமாக இண்டியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடித்துள்ளன.
இதை பெண்களுக்கு எதிராக இண்டியா கூட்டணி கட்சிகள் துரோகம் இழைப்பதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அந்த பிரச்சாரம் எடுபடாது. மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக நடவடிக்கைகளை, துரோகங்களை சுட்டிக்காட்டுவதற்குக் கூட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திறனற்றவராக உள்ளார்.
அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் துரோக நடவடிக்கைகள் அனைத்தையும் தட்டிக் கேட்கிறார். தமிழகத்துக்கு இதுபோன்று தட்டிக் கேட்கின்ற தலைவர்தான் வேண்டும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.