அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பள்ளிக் குழந்​தைகளை அதிக அளவில் ஏற்​றிச் செல்​லும் ஆட்​டோக்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று போக்​கு​வரத்​துத் துறை​யினருக்கு அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யுள்​ளார்.

பள்​ளிக் குழந்​தைகளை ஏற்​றிச்செல்​லும் ஆட்​டோக்​கள் மீது தெரிவிக்​கப்​பட்​டுள்ள புகார்​கள் தொடர்​பாக போக்​கு​வரத்​துத் துறை இயக்​குநருடன், அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று முன்​தினம் ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது பள்​ளிக் குழந்​தைகளை ஆட்​டோக்​களில் ஏற்​றிச் செல்​லும்​போது கடைபிடிக்க வேண்​டிய விதி​முறை​கள் தொடர்​பாக அனைத்து போக்​கு​வரத்​துத் துறை​யினருக்​கும் பல்​வேறு அறி​வுரைகளை வழங்​கி​னார்.

அதன்​படி ஆட்​டோக்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட எண்​ணிக்​கையை விட மிக அதி​க​மான அளவில் பள்​ளிக் குழந்​தைகள் ஏற்​றிச் செல்​லப்​படு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. இதை அலு​வலர்​கள் கண்​காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அறி​வுறுத்​தி​னார்.

மேலும் பள்​ளிக் குழந்​தைகளை ஏற்றி செல்​லும் இத்​தகைய வாக​னங்​களின் இரு​புற​மும் முறை​யானபாது​காப்பு தடுப்​புக் கதவு​கள் இருப்​ப​தை​யும், அவசர கால பயன்​பாட்​டுக்​கான முதலுதவி பெட்டி பராமரிக்​கப்​படு​வதை​யும், அவசர கால காவல் துறை உதவி எண்​கள் தெளி​வாக காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்ளதையும் போக்​கு​வரத்​துத் துறை​யினர் உறு​தி​செய்ய வேண்​டும்​ என்​றும்​ உத்​தர​விட்​டார்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வாட்ஸ்-ஆப் மூலம் ஓபி சீட்டு பெறும் சேவை தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in