காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வருடன் இணைந்து திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வருடன் இணைந்து திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: காவிரி விவகாரத்தில் தீர்வு காண முதல்வர் விஜய் பல வழிகளில் முயற்சி மேற்கொண்டாலும், திமுக கர்நாடக முதல்வருடன் இணைந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக முன்னாள் முதல்​வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதல்வரை தனிமைப்படுத்த வேண்டும் என்றே, கர்நாடக முதல்வருடன் சேர்ந்து திமுக செயல்பட்டதுபோல தெரிகிறது. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும், திமுக குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு உள்ளது. காங்கிரஸ் தலைமையைவிட திமுக தலைமை சொல்வதைக் கேட்டுதான் சிவகுமார் செயல்படுவார்.

தவெக எம்​எல்​ஏக்​களை விலைக்கு வாங்க முயற்​சித்த விவ​காரத்​தில், பிடிபட்ட பெரும்​பாலான பணம், பெங்​களூரு​வில் இருந்து தமிழகத்​துக்கு வந்​தவை. ஜெயலலிதா ஆட்​சிக் காலத்​தில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்​கக் கூடாது என்று பல வகை​களில் முட்​டுக்​கட்டை போட்​டார் கருணாநி​தி.

அதே​போல​தான் திமுக இப்​போதும் செய்​கிறது. காவிரி விவ​காரத்​தில் தீர்வு காண முதல்​வர் விஜய் பல வழிகளில் முயற்சி மேற்​கொண்​டாலும், திமுக கர்​நாடக முதல்​வருடன் இணைந்து முட்​டுக்​கட்டை போட்டு வரு​கிறது.

காவிரி பிரச்​சினை​யில் கடந்த 30 ஆண்​டு​களாக திமுக​வின் குழப்​பத்​தால்​தான் தமிழகத்​துக்கு பின்​னடைவு ஏற்​பட்​டது. முதல்​வர் ஆலோ​சனை நடத்தி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர முடிவு செய்​தார்.

திமுக​வும் வழக்கு பதிவு செய்​துள்​ளது. இது​போல ஒரே மாநிலத்​தில் இருந்து தனித்​தனி​யாக பல வழக்​கு​கள் பதிவு செய்​வது குழப்​பத்​தையே விளைவிக்​கும். அதி​முக​வும் இதே​போல​தான் செயல்​படு​கிறது.

ஜெயலலிதா எவ்​வளவு உறு​தி​யாக முடிவு எடுப்​பாரோ, அதற்கு நேர் மாறாக தற்​போதைய அதி​முக, கர்​நாடக பாஜக​வின் ஆதர​வாக செயல்​படு​கிறது. மேகே​தாட்டு அணை தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் ஆதரவு தெரி​வித்து தீர்​மானம் நிறைவேற்​றி​விட்​டு, அதி​முக கடந்த வாரம் உயர் நீதி​மன்​றத்​தில் தனி​யாக ஒரு வழக்கு தொடர்ந்​தது.

இது​போன்ற நிலைப் ​பாட்​டில் உள்​ளவர்​களை வைத்து எப்​படி அனைத்​துக் கட்​சிக் கூட்​டம் நடத்த முடி​யும். முதல்​வருக்கு நெருக்​கடி கொடுப்​ப​ தாக நினைத்து தமிழக மக்​களுக்கு எதி​ராக செயல்​படு​கின்​றனர்.

கபினி அணை​யில் இருந்து கர்​நாடக அரசு இப்​போது திறந்​து​ விட்ட நீர் நமக்கு போது​மான​தாக இல்​லை. தமிழகத்​துக்கு 17 டிஎம்சி தண்​ணீர் வேண்​டும். ஆனால், உபரி நீரை திறந்​து​விட்டு கணக்கு காட்​டு​வதை ஏற்க முடி​யாது. தமிழக நலனைப் பாது​காக்க, உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு சார்​பில் ஆக.3-ம்​ தேதி (இன்​று) வழக்​கு தொடரப்​படு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வருடன் இணைந்து திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
“தமிழக முதல்வர் விஜய் துணிச்சலாக இருக்கிறார்...” - கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in